Wednesday, December 19, 2007
ஊடகப் போர் (Media War)
- நாரதர்-
'அய்யோ பாவம் பாருங்கள் இந்தப் பாடசாலை பிள்ளை நுகேகொடையில் புலிகள் வைத்த குண்டு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இவளின் தாய் தந்தையின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும்" என என்னுடன் பணிபுரியும் பெரும்பான்மை யுவதியொருவர்; புலம்பியதை கேட்ட எனக்கும் மிகுந்த வேதனை அளித்தது.ஆனால் (28.11.2007) ஆம் திகதியன்று கிளிநொச்சி ஐயங்கேனியில் வைத்து இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவித் தாக்கும் படையினரின் தாக்குதலில் பலியான ஒன்பது பாடசாலை மாணவர்களினதும் பெற்றோர்களின் மனமும் இவ்வாறு தானே வேதனையுற்றிருக்கும் என நான் அளித்த பதிலிற்கு அவள் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதா என என்னிடம் மீண்டும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டபோது நான் திகைத்துப் போனேன்,மிகவும் ஆச்சர்யமடைந்தேன்.
நான் இங்கு அன்மையில் கிளிநொச்சியிலும் நுகேகொடையிலும் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புச்; சம்பவங்களையும் ஒப்பிட்டு அவ்விரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சிங்கள ஆங்கில நாளிதழ்கள் எந்தளவு முக்கியத்துவத்தினை வழங்கியிருந்தன என்பதனையே அங்கு சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன் ஆகையால் கொலைகளை நியாயாப்படுத்துவதாக இது அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது வாசகர்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதாவது வடகிழக்கில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்படுவதனை தென் சமூகத்தினர் அறிந்துகொள்ளாதிருப்பதன் காரணத்தினாலேயே இன்னும் படுகொலைகள் அதிகரித்த வண்ணமுள்ளது.இதற்கு முக்கிய காரணம் இவ்வாறான சம்பவங்கள் தென்னிலங்கையில் இடம்பெறும் பொழுது அவற்றை மனிதாபிமானக் கண்கொண்டு பார்க்கும் பெரும்பான்மை ஊடகங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது அவற்றின் மீதும் காட்டாமையாகும்.அதனாலேயே அவள் அவ்வாறானதொரு வினாவை என்னிடம் தொடுத்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் இப்பத்தியை எழுதும் அதேவேளை முன்பு இப்பத்தியின் மூலம் பெரும்பான்மை ஊடகங்கள் யுத்தத்திற்காதரவாகவும் அவற்றுக்கு தீணிபோடும் வகையிலும் செயற்பட்டு வந்ததனை இதில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன்.அது இன்று 100 வீதம் நிரூபணமாகியுள்ளது.
அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி ஐயங்கேனி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது மாணவர்கள் பற்றிய செய்தியறிக்கைகளையும் 29 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவியொருவர் தொடர்பாக தென்னிலங்கையில் வெளிவரும் சிங்கள பெரும்பாண்மை ஊடகங்கள் கையாண்ட செய்திப் போக்கை இங்கு தரம்பிரித்து காட்டுவதன் மூலம் ஊடகங்கள கொண்டுள்ள இனவாத போக்கை இதன் மூலம் நன்கு புலப்படுத்திக் காட்டமுடிகின்றது.
அந்த வகையில் ஐயங்கேனி சம்பவத்திற்கு தமிழ் செய்தித்தாள்கள் அனைத்தும் முன்னுரிமை வழங்கி முன் பக்க பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
'டெய்லி மிரர்" ஆங்கில நாளிதழ் இச்சம்பவத்தினை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.வேறெந்தவொரு ஆங்கில பத்திரிகையும் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரிக்க முன்வரவில்லை.சிங்கள பத்திரிகைகளான 'திவியினவும்" 'லங்காதீபவும்" சிறு செய்திகளாக பிரசுரித்திருந்த போதிலும் அதில் லங்காதீப பத்திரிகை இம்மாணவர்களை புலிகளாக சித்திரித்துக் காட்ட தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
அச்செய்தியின் விபரம் வருமாறு
லங்காதீப 28ஃ11ஃ2007
'பலிகளின் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு"
எல்ரீரீஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயங்கேனி பிரதேசத்தில் (27ஃ11ஃ2007) நேற்று காலை இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பின் போது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகளின் மாவீரர் தின இறுதி நாள் வைபவத்தில் கலந்து கொள்வதற்கு சென்று கொண்டிருந்த குழுவினரே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் மாவீரர் தின வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற புலிகள் அமைப்பைச் சேரந்த குழுவொன்றே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில் தமிழ்நெற் செய்ததித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் வானில் பயனித்துக்கொண்டிருந்த 'பாடசாலை மாணவிகளும் வான் சாரதியும் மற்றொரு சிவிலியனும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது என லங்காதீப பத்திரிகை தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஊடகப் போர் இனப்பிரச்சினை உக்கிரமடைந்து வரும் இலங்கையில் தொடரப்பட்டால் மனிதாபிமானமற்ற சமூகமொன்றையே எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டியேற்படும்.
சமூகங்களுக்கிடையில் நல்லறவுகளையும் சரியான தகவல்களையும் வழங்குவதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டிய ஊடகங்கங்கள் இனவாத அடிப்படையில் செயற்படும் பொழுது நாட்டில் அழிவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
Wednesday, August 8, 2007
Wednesday, March 28, 2007
திறந்தவெளி சிறைச்சாலையாகும் திருகோணமலை
அந்த வகையில் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இன்று அவற்றுக்கு பதிலாக கருணா குழுவினர் அலுவலகங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.அவர்கள் வழக்கு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கு பொலிஸ் அதிகாரிகளும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றனர்.இதனை நாம் அங்கு சென்று போது நேரில் காணக்கூடியதாயிருந்தது.’நாம் இங்கு பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணைகள் செய்து வருகின்றோம்.அத்துடன் பொது மக்களுக்கு எதிராக இடம்பெறும் வீதிகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் இடைஞ்சலுக்கெதிரான நடவடிக்கைகளையுமே நாம் மேற்கொண்டு வருகின்றோம்.” என அலுவலகத்தின் அதிகாரியொருவர் தமது கருத்துக்களை தெரிவித்தார்.ஆனால் கருணா குழுவினர் நகரில் பிரபல வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டின் இறைமையுள்ள அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படையை வைத்திருக்க முடியுமென்று அரசாங்கத்தின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படைகளை வைத்திருக்க முடியும்.அரசாங்கத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து ஆயுதப்படைகளும் சட்டவிரோதமானதென்றும் கூறப்படுகின்றது.இதுவொரு ஜனநாயக விரோத செயற்பாடு.
அதேவேளை விடுதலைப்புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்த்து வருவதாக அரசாங்கம் புலிகளை குற்றஞ்சாட்டுகின்றது.ஆனால் கருணா குழுவில் சிறுவயதினையுடைவர்கள் ஆயுதமேந்தி அவர்களுடைய அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை இதே அரசாங்கம் இன்னும் கண்டுகொள்ளவில்லை.இவர்களுக்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகையில் ஜனநாயகவிரோத செயற்பாடென அரசாங்கம் கூக்குரலிடுகையில் கருணா குழுவினர் ஆயுதமேந்தியிருக்கும் வேளையில் அதே அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதுடன் அனுமதியும் வழங்கியுள்ளது.
அல்லைப்பிட்டியும் விசாரணையும்

இந்நாட்டின் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சரத் அம்பேபிட்டிய பாதாள உலக கோ~;டியினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது குற்றவாளிகள் ஒரு மாதத்திற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இது இலங்கையின் நீதித்துறையின் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட துரிதமான தீர்ப்பென குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிசாரும் நீதித்துறையும் அரசாங்கமும் மார்தட்டிக் கொண்டது.
நாம் இங்கு கேட்க விரும்பும் முதலாவது கேள்வி அப்பாவி பொது மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குடும்பத்தோடும் படுகொலை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு மட்டும் பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைப்பதில்லை என்பதாகும். அப்படியாயின் இந்நாட்டில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நீதிபதியொருவர் கொலை செய்யப்பட வேண்டுமா? என்பதாகும்.
அன்றிரவு இரவு இடம்பெற்ற இக்கோரச் சம்பவம் பற்றி தமிழ் செய்தி நாளிதழ்கள் (15.03.2007ம் திகதி தினக்குரல்) பிரசுரித்த செய்தியின் ஒரு பகுதியினை இங்கே குறிப்பிடுதல் சம்பவத்தை மீட்டுப்பார்ப்பதற்கு ஆதாரமாகின்றது. 'இரவு 8.30 மணியளவில் அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றினுள் முகத்தை கறுப்புத் துணிகளால் மூடிக்கட்டியவாறு நுழைந்த ஆயுத பாணிகள் அங்கிருந்தவர்களை சுட்டுத்தள்ளியுள்ளனர்.
ஒன்றாக படுக்கையறையினுள் உறங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்;தரையும் அவரது மனைவியையும் அவர்களுக்கிடையில் உறங்கிக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தையும் 4 வயது சிறுவனையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியுள்ளனர்.
தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது தாயும் தந்தையும் தங்களுக்கடையில் உறங்கிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்கள் இருவரையும் தங்கள் மார்புடன் கட்டியணைத்த போதும் ஆயுத பாணிகள் அந்தப்பிள்ளைகளையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளனர்.
இவர்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்து தலைப்பகுதிகளையும் மார்புப்புகுதிகளையும் சல்லடை போட்டுள்ளன.
இந்தச் சம்பவம் அப்பகுதி கடற்படை முகாம், பல காவலரண்கள், கடற்படையினரின் சோதனை நிலையத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்றுள்ளது. எனினும் படையினர் கூட அங்கு வரவில்லை.
இச்சம்பவத்தால் தீவுப்பகுதி அச்சத்தில் உறைந்து போயுள்ளது. அல்லைப்பிட்டியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கோயில்கள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடற்படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் அவர்களே இப்பகுதியில் பல பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தச் சம்பவங்களுடன் தங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகும். அதன் பின்னர் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் அதேவேளை, படையினர் அவற்றை மறுப்பதும் பின்னர் அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று அமைப்பதுடன் சம்பவம் தூக்கியெறிப்படுதல் ஒரு சம்பவமாகிவிட்டது.
அல்லைப்பிட்டி சம்பவம் பற்றிய வழக்கு இறுதியாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியொருவரினூடாக அடையாள அணிவகுப்பும் நடைபெறவிருந்தது. இவ் அடையாள அணிவகுப்பிற்காக கடற்படையினரே உட்பட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணிவகுப்பிற்கான சூழல் யாழில் இல்லையெனக் கூறி அம்பாறையிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு தரப்பினரால் முடிவு செய்யப்பட்டது. வடதுருவத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றினை பிரிதொரு இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுதலென்பது எவ்விதத்திலும் சாத்தியமற்றது. ஆனால் அதற்கான ஏற்பாடுகளோ அல்லது முன்னெடுப்புக்கள் எதுவுமோ இவ்வாரம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்காத்திற்குமிடையில் ஏற்பட்ட மோதல்களும் ஏ-9 பாதை மூடப்பட்டதும் இச்சம்பவம் பற்றிய பார்வை வேறு வடிவம் பெற்று முக்கியத்துவமற்றதொரு சம்பவமாக உருவெடுத்து விட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹே~; பெரேரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று யாழ் சென்று யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கலாக இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் அவை எதுவும் ஆரோக்கியமானதாக அமையவில்லை.
இச்சம்பவம் தொடர்பான இறந்த காலம் இவ்வாறு இருக்கையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரை திருப்திகரமானதாக முன்னெடுக்கப்படவில்லை.
அல்லைப்பிட்டி சம்பவம் இடம்பெற்ற அதே திகதியில் மொத்தமாக பதின்மூன்று பேர் அக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் இவ்வாறு வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு செல்கையில் பொது மக்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய அரசாங்கமே அசமந்தப்போக்கில் இருக்கின்றமை தமிழ் மக்களுக்கு எவர் மூலமும் விமோச்சனம் இல்லையென்பதனையே இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.
இக்கட்டுரையினூடாக இச்சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் வரையில் எவருக்கும் இச்சம்பவம் நினைவில் இருக்காது மறந்திருப்பார்கள். ஆனால் துரதி~;டவசமான சம்பவம் யாதெனில் ஒரே இரவில் அப்பாவி பொது மக்கள் பதின்மூன்று பேர் மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது சிங்கள பத்திரிகைகளான திவயின, தினமின, லக்பிம மற்றும் லங்காதீப பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்தியாகவும் சிறு செய்தியாகவும் பிரசுரித்ததிலிருந்து அச்செய்திகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தினை அவை எந்தளவு நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இதைத்தவிர டெய்லி மிரர் பிரதான தலைப்புச் செய்தியாகவும் டெய்லி நியுஸ் பத்திரிகை மற்றும் த ஐலன்ட் ஆகிய ஆங்கில தினசரி பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்திகளாகவும் அறிக்கையிட்டிருந்தன.இவற்றுள் (15.05.2006ம் திகதி) தினமின பத்திரிகையில் முன்பக்க சிறு செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியை இங்கு குறிப்பிடுதல் மிகவும் முக்கியமானதாகும்.
'மண்டை தீவு சிவில் மக்கள் படுகொலையினை ஜனாதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்"யாழ் மண்டை தீவில் நேற்று முன்தினம் (13) சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தாம் கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிடுகின்றார். இத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பாக உடன் விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஆணையிடும் ஜனாதிபதி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தராதரமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவே இச் செய்தி.
ஜனாதிபதி அவர்களே இச் சம்பவம் தொடர்பாக உங்களிடமே நாம் கேள்வியைக் கேட்கின்றோம்.இதற்கு யார் பதில் சொல்ல வேண்டும்.
Sunday, March 18, 2007
யுத்தத்தில் உயிர் துறக்கும் உண்மை

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டிய இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவத் தீர்வில் வெற்றிக்கொள்ள முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தின் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்ட வகையில் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கேற்றாற் போல் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெல்லவின் தாஜா பன்னல்கள் அரசின் கடும்போக்கையும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளையும் உலகிற்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்த வகையில் கடந்த 06 ஆம் திகதி ஐரிஎன் தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான செய்தியில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லை ஊடக துறைக்கு புதிய அத்தியாயமொன்றை இணைத்துள்ளார்.அது இஸ்ரேல் பற்றிய அத்தியாயமாகும்.
'1967 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தத்தின்போது அந்நாட்டின் 13 தொலைக்காட்சி சேவைகளில் ஒரு தொலைக்காட்சியாவது அவ் யுத்தத்தை விமர்சிக்கவில்லை." முழு உலகமும் விமர்சனம் செய்கையில் அவ்வாறானதொரு தேசப்பற்று அவர்களுக்கு இருந்தது.
விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவி வழங்கும் பல அலைவரிசைகள் உள்ளன.; அவற்றுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் நாம தெரிவிப்பதாவது அவற்றுக்கு பொது மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதாகும்.1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு எதிராக கொடூரமான கோர யுத்தமொன்றையே மேற்கொண்டது.அவ் யுத்தத்தில் எகிப்தினதும் சிறியாவினதும் பாரிய நிலப்பிரதேசத்தை இஸ்ரேல் பலவந்தமாக அபகரித்துக் கொண்டது.இதன் பின்னணியிலேயே இன்று அங்கு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது.
1967 ஆம் ஆண்டின் யுத்தத்தினை வரவேற்கும் இந்நிலைப்பாட்டை பலஸ்தீன் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரான மஹிந்த ராஜபக்~ ஏற்றுக்கொள்கின்றாரா? இந்நிலைப்பாட்டை பலஸ்தீன போராளிகள் ஏற்றுக்கொள்வார்களா?
இதன் மூலம் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல பிழை என தெரிந்துகொண்டும் ஊடகவியலாளர்களை பிழைகளுக்கு துணைபோகுமாறு கூறுகின்றார் என்பது அரசாங்கத்தின் தத்துவமென இதன்மூலம் புலப்படுத்துகிறதல்லவா?
அவரின் கூற்றுக்கு நாம் இவ்வாறு பதிலளித்தால்
அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் சரியான தூரப்பார்வையுடைய ஊடகவியலாளர்கள் இருந்திருப்பார்களாயின் என்ன செய்திருக்க வேண்டும்? ஆக்கிரமிப்பின் யதார்த்தினை இஸ்ரேலிய மக்களுக்கு எடுத்துக்கூறுவதா? இல்லாவிடில் அமைச்சர் கேஹலிய குறிப்பிடுவது போல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ஓ போடுவதா? அன்று அவ் அத்துமீறிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொள்iயொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடிந்திருப்பின் பலஸ்ததீன மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு இஸ்ரேல் மக்களை இணங்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அவ்வாறான ஊடகக் கொள்கையொன்றினை கட்டியெழுப்ப முடிந்திருப்பின் அப்படியாயின் இன்று மத்திய கிழக்கில் சிறந்த வரலாறொன்றை காண முடிந்திருக்கும்.
எமக்கு தெரிந்த மற்றும் நாம் கற்றுக்கொண்டுள்ள ஊடகவியலானது உண்மையை பொதுமக்களுக்கு எடுத்தியம்புவதாகும். அதைவிடுத்து குரங்குகளைப் போன்று கட்சிகளை விட்டு விட்டுத் தாவிக்கொண்டிருககும் அமைச்சர்களுக்கு கொடிபிடிப்பதல்ல.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அமெரிக்காவில் இருந்தனர்.இஸ்ரேலுக்குள்ளும் அவ் ஆக்கிரமிப்புக்களை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.அவ் யுத்தத்திற்கு எதிராக சனத்திரளொன்று கட்டியெழுப்பப்பட்டதே இவ் ஊடகங்களின் விமர்சனங்களினடிப்படையிலேயாகும்.
ரம்புக்வெல்ல சிந்தனைக்கேற்ப யுத்தம் சரியாக மேற்கொள்ளப்படுகின்றதென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதாகும்.அவ்வாறு செய்யாதோர் தேசத்துரோகிகளாவார்கள்.விமர்சன ரீதியிலான ஊடகங்கள் யுத்தத்தை முழுமையாக ஆதரிப்பதில்லை.அதனால் அவை தேசத்துரோகிகளாகின்றன.அவ்வாறாகாமலிருப்பதாயின் அவர்கள் இஸ்ரேலின் உதாரணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது முழு உலகமே பிழையென தெரிவித்த கருத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென தெரிவிப்பதாகும்.
1981 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தனவும் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவும் யுத்தத்தை சரியான வழியில் செய்வதாகவே தெரிவித்தனர்.அப்பொழுது அநுருத்த ரத்வத்தை யுத்தத்தினை விற்றுத் தின்பதாக ஜே.ஆரிற்கு எதிராக nரிவித்தார்.அன்று ஜக்கிய தேசியக் கட்சியில் அமர்ந்திருந்த கேஹலிய ரம்புக்வெல்லவின் கட்சி கூட சந்திரிக்கா யுத்தத்தை விற்றுத் தின்பதாக தெரிவித்தது.இன்று மஹிந்த ராஜபக்~வின் அரசாங்கத்தில் தாவிக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காவிடில் மஹிந்த ராஜபக்~விற்கும் இவரின் அரிச்சந்திர வாயால் யுத்தத்தை விற்றுப்பிழைப்பதாக தெரவித்திருக்கக் கூடும்.
கிழக்கு மாகாணம் மீதான யுத்தம் போலியானதென தெரிவித்தது பத்திரிகையாளர்கள் அல்ல.இன்னும் அரசின்; சகாவான ஜேவிபியாகும்.கிழக்கு மீதான யுத்தம் உடனடியாக யுத்தத்தில் வெற்றி பெறுதல் என்பதே ஜேவிபி தலைவர் லால்காந்த பகிரங்மாக தெரிவித்திருந்தார்.அவ்வாறு விமல் வீரவன்சவும் தெரிவித்தார்.
ரம்புக்வெல்ல சிந்தனைக்கு ஏற்ப லால் காந்தவும் தேசத்துரோகி விமல் வீரவன்சவும் தேசத்துரோகி.
அமைச்சரின் கூற்றுக்கேற்ப பார்த்தால் இரணடாம் உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லர் கூட ஊடகங்கள் அனைத்தும் தமக்கு சார்பாகவே செயற்படவேண்டுமென கட்டளையிட்டிருந்தார்.அப்படியாயின் இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாலஸ்தீன மக்களின் கருத்துக்களை ஊடகங்கள் தெரிவிக்கக்கூடாதா?
அதே போல் இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தத்திற்கு எதிராக இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்கக்கூடாது என்பதனையே அமைச்சரின் கூற்று வெளிப்படுத்துகின்றது.
இவற்றின் மூலம் புலப்படுவது யாதெனில் யுத்தமொன்றின் போது முதலில் உயிர்துறப்பது உண்மை என்பதாகும்.
கவிஞர் அப்துல் ரகுமானின் மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல என்ற தனது கவிதை புத்தகத்தில் கூறிய கவிதையின் ஒரு பகுதியை குறிப்பிடுதல் மிகவும் பொறுத்தமாக இருக்கும்.
அது
இது அமைச்சருக்கு எந்தளவுக்கு பொறுந்துகிறது.
Friday, March 16, 2007
Monday, March 12, 2007
' ரணவக்க சிந்தனை '
சூழலியல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையிலாவது எம்மை கொலை செய்ய வேண்டுமென தற்பொழுது பகிரங்கமாக கூற ஆரம்பித்து விட்டார்.சம்பிக்க ரணவக்க அவர்கள் ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகரென கேதீஸ்லோகநாதனின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்ட அவரது கட்சியின் முக்கியஸ்ததர் ஒருவரே எமக்கு தெரிவித்தார்.அவ்வாறானதொரு நிலையிலுள்ள ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது அதற்கு உரிய கவனத்தை செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.அதனாலேயே இக்குறிப்பு எழுதப்படுகிறது.
இவ்வாறு கடந்த வாரம் ராவய பத்திரிகையில் 'தடைகளுக்கு மத்தியில் பிரஜை ஊடகவியலாளரொருவரின் குறிப்புக்கள்" எனும் பத்தியை தொடர்ச்சியாக எழுதி வரும் சுதந்திர ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ' சூழலியல் (பயங்கரவாத) அரசியல் ' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தினை தினக்குரல் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கின்றோம்.
கடந்தவொரு தினத்தில் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவரது கட்சியின் முக்கிய நபரொருவர் அழிக்கப்படவேண்டியவர்களின் பெயர் பட்டியலொன்றை வெளிப்படுத்தினார்.
இது புதிய அச்சுறுத்தலல்ல.சம்பிக்க ரணவக்க அவர்களின் 'புலிகளை ஊடறுத்துச் செல்லல் ' (கொட்டி விநி விதீம) என்ற அவர் எழுதிய நூலை வாசித்துப் பார்க்கும் பொழுது புலனடைவது அவருடன் தற்பொழுது அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் பல அமைச்சர்களை பல்வேறு விதங்களில் புலிகளென குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ்,தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்,மலையக மக்கள் முன்னணி,சமசமாஜக் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சி,ஈபிடிபி,புளொட் அமைப்பு என அனைத்து கட்சிகளும் சூழல் அமைச்சருக்கு ஏற்ப புலிகளுடன் தொடைபுடையவர்கள் என்பதனால் அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.அவற்றுல் புளொட்டை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தற்பொழுது அமைச்சு சபையிலே இருக்கின்றன.
அதே போல் ஊடகப் புலிகள் இடதுசாரி புலிகள் மற்றும் சமாதான புலிகள் என அமைச்சர் உட்பட அமைச்சர் தலைமை வகிக்கும் இயக்கங்கள் மூலம் குறிப்பிடப்படும் நபர்கள் அழிக்கப்படவேண்டுமென கொழும்பின் மதில்களில் ஒட்டபட்டுள்ள சுவரொட்டியில் மற்றும் அவர் ராவயவிற்கு தெரிவித்த கருத்துக்கள் சம்பிக்க ரணவக்கவின் நூலினை அடிப்படையாக வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் சில பிரிவுகளை ராவயவின் வாசகர்கள் தெரிந்துகொள்ளுவதற்கு எடுத்துக்காட்டுதல் சிறந்ததாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என சுட்டிக்காட்டும் சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை இதுவாகும்.
' முதலவாது மாயை யாதெனில் தமிழ் மக்கள் மற்றும் புலிப் பயங்கரவாதம் என இரு விடயங்கள் இருக்கின்ற போதிலும் அதே போல் புலிப்பயங்கரவாதத்திற்கு தமிழ் மக்களால் வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்த வேண்டுமெனில் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாi~களையும் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதாகும். '
தமிழின் துன்பங்கள் பிரயோசனப்படுவது புலிகளின் படுகொலை செயற்பாடுகளுக்கே. தமிழ் என்ற பெயரில் வழிநடத்தப்படுவது புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழன்களுக்கும் அவர்களைக்; கொண்ட தமிழ் சமூகத்திற்கு மட்டுமே.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் நியாயப்படுத்துவது இவ்விதத்திலேயாகும்.
ஹிட்லர் உருவாகியதற்கு ஜேர்மனி சமூகம் நஷ்ட ஈட்டை செலுத்தியது போல் பிரபாகரனை உருவாக்கியதற்கு தமிழ் சமூகமும் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டும்.
எந்தவொரு அரசியல்வாதிக்கும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரிமையில்லாத அதேவேளை அதனை தடுப்பது அனைத்து பிரஜைகளினதும் தேசிய கடமையாகும் என்பதாகும்.
தமிழ் மொழி ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைக்கு காரணம் கற்பிப்பது இதனடிப்படையிலாகும்.
கொழும்பு மற்றும் கண்டி தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட இரு தொலைககாட்சி அலைவரிசைகளும்;;; வானொலி சேவைகள் இரண்டும் வேகமாக பரவியுள்ள மூன்று பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் இருப்பதுடன் அவை நேரடியாக புலிகள் அமைப்பின் கொள்கையினை பிரச்சாரப்படுத்துகின்றது.
1987 ஆம் ஆண்டிற்கு பின் கொழும்பிற்கு வந்த தமிழ் மக்களை அவதானிக்கப்பட வேண்டுமென இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக 1987 ஆம் ஆண்டிலிருந்து வருகைதந்த தமிழ் குடியேற்றவாசிகளின் மூலம் சம்பிரதாயபூர்வ மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களை மீளப்பொற்றுக்கொள்ளலாகும்.இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில்..
அமெரிக்கா மற்றும். எல்ரிரிஈ தொடர்பாக
இந்திய ராஜிவ் காந்தி படுகொலை ஆணைக்குழு குறிப்பிடும் விதத்திற்கு ஏற்ப புலிகள் அமைப்பு ஐக்கிய அமெரிக்க உளவுப் பிரிவுடன் தொடர்புடையதாகும்.திருகோணமலை துறைமுகத்தை புலிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உடன்படிக்கையொன்றுக்கும் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கும் மேலதிகமாக பிரித்தானிய உளவுப் பிரிவுடனும் பாகி~;தான் உளவுப்பிவிவுடனும் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(புலி) அமைச்சு சகாக்கள் பற்றி
சந்திரசேகரன் மற்றும் தொண்டமான் தற்பொழுது வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில் மலைநாட்டு மற்றும் செங்கடகலை பிரதேசம் இந்திய தோட்ட தமிழர்களின் தாயக பூமியென தெரிவித்துள்ளனர்.முதலில் சனத்தொகையை அமைத்துக்கொண்ட அவர்கள் பின்னர் நிலத்தையும் வெற்றிகொண்டுள்ளனர்.அடுத்தாக கொள்கையையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொண்டு செல்வர்.இறுதியில் யுத்தம் மற்றும் தனிராச்சியத்தை நோக்கி வருவர்.
முன்னாள் போராட்ட இயக்கமென கூறிக்கொள்ளும புளொட்,ஈபிஆர்எல்எவ்,ஈபிடிபி,டெலோ அமைப்புக்களும் தமிழர் விடுதலை கூட்டணி தொடர்பான யதார்த்தை தற்பொழுதாவது இலங்கை சமூகம் புரிந்துகொள்ளல் வேண்டும்.புலிப் பயங்கரவாதிகள் குறைநிரப்பாகசெயற்படும் இவ் சேற்று நிறத்தைக்கொண்ட புலிகள் அமைப்பை தடுத்தல் அமைதியான இலங்கைக்கு அத்தியவசியமான நிபந்தனையாகும்.
தமிழ் இனவாதிகளின் புலிப்பயங்கரவாதிகளுக்கு உதவியாளர்களாக செயற்படும் தெற்கின் சில சேற்று நிறம் கொண்ட கூட்டங்களும் வாழ்ந்து வருகின்றன.லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றன.
முஸ்லிம் அரசியல் பற்றி..
முஸலிம் குண்டின் சேவ நூலிற்கு அ~;ரப் தீ வைத்துள்ளார்.தற்பொழுது முஸ்லிம் இனவாத கொள்கையொன்றும் அரசியலும் எழும்பியுள்ளதுடன் அவ் நிலையில் அதற்கு பெரும்பாலும் யுத்த முன்னெடுப்புகளும் இணைத்துக் கொள்ளப்படும்.
அதற்கேற்ப அடுத்த நூற்றாண்டின் நிலைமை இதுவாகும்.அப்படியாயின் 1994 ஆம் ஆண்டு 13 லட்சமாக இருந்த முஸலிம்களின் சனத்தொகை நூறு வருடத்தில் 300-400 லட்ச சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாட்டின் சனத்தொகையில் 55 சதவீதத்தினைக் கொண்ட சனத்தொகையாக முஸலிம் சனத்தொகையைக் கொண்டதாக இலங்கை காணப்படும்.
ஆசியாவில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தல்களின் ஆட்சியாளர்களாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர்.இதற்கமைய இலங்கையின் மோதலுக்கு நிதி மற்றும் மனிதர்களை அனுப்புவதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் முன்வந்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்~ அரசாங்கம் செயற்படுவது சம்பிக்க ரணவக்க அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள பரிந்துரைகளுக்கு அமையவே.அரச சார்பற்ற நிறுவனங்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படல் வேண்டுமென்பது சூழல் அமைச்சரின் கருத்தாகும்.தமிழ் சமூகம் தொடர்பாக தமிழ் தொடர்பாகவும் செயற்படுத்தப்படுவதும் இந் நூலில் குறிப்பிடப்படுள்ள பரிந்துரைகளுக்கு அமையவாகும்.
மேலும் இவ் எழுத்தாவணத்திற்கு அமைய சூழல் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கேற்ப பலர் அழிக்கப்படவேண்டியுள்ளனர்.இவர்களில் சிலர் இருப்பது தற்பொழுது இவர் இருக்கும் அமைச்சரவையிலாகும். அப்போராட்டத்தையும் தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு அவகாசம் உள்ளது.
அவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எம்மை வாழ்வதற்கு இடமளித்தால் அப்போராட்டம் முடிவுறும் விதத்ததை பார்ப்பது புதுமையானதாக இருப்பதற்கு இடமுண்டு.
தினக்குரல் 11.03.2007
Thursday, March 8, 2007
International missin report
Sunday, March 4, 2007
யுத்தத்தை ஆதரிக்கும் தென்னிலங்கை
இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ருபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான ' ஜனபதி ஹமுவ ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ 'புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை" என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள்.
ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும் திகழ்கின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பார்த்து நாட்டின் அதிபரே அவ்வாறு கூறுகையில் நாட்டில் தற்பொழுது வடகிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரகடனப்படுத்தப்படாத போர் எந்தளவு தூரம் முழு அளவிலான போருக்கு தன்னை அது சுதாகரித்துக் கொண்டுள்ளது என்பதனை விளங்கிக்கொள்வதொன்றும் கடினமான விடயமல்ல.
அந்த வகையில் கடந்த வாரம் கொழும்பின் பல புறங்களில் யுத்தத்திற்கு ஆதரவாகவும் சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களை நாட்டிற்கு குந்தகத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப்பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தோம.;அந்த வகையில் அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் வாகரையில் விடுதலைப்புலிகளுடனான சமரில் வெற்றி வாகை சூடிய இராணுவ வீரர்களுடன் பலத்த புன்னகையுடன் அளாவுலாவும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் கொழும்பின் எல்லா இடங்களிலும் தற்பொழுது காணக்கூடியதாயுள்ளது.
அச்சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்ததாவது
' கொலைகார புலிகள் அழிந்து விட்டனர்
- நில் படையணி-
என்பதே அச்சுவரொட்டியின் மூலம் கூறப்பட்டிருந்த தகவல்.
இன்று தெற்கில் ஒரு காட்டுத்தர்பார் போன்ற போக்கே தலைதூக்கியுள்ளது.அந்த வகையில் எவர் சமாதானத்தைப் பற்றி பேசினாலோ அவர் ஒரு புலி,எவர் போரை விமர்சிக்கின்றாரோ அவர் ஒரு தேசத்துரோகி.நியாயமற்ற முறையில் இனவாத அடிப்படையில் இப்படியான குழுக்கலினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கே வழியில்லாமல் பன்னிவிடும் அது.இன்று மௌனம் சாதிக்கும் அனைவரும் வேதனைப்படுவர்.
எவரும் தமது வெற்றியை கொண்டாடுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமையுண்டு.அதேவேளை அவை ஏனைய சமூக இனத்தவர்களை புன்படுத்தாத வகையிலும் அச்சுறுத்தாத வகையிலும் அதனால் வேறு விளைவுகள் ஏற்படாத வகையில் தமது வெற்றியை கழிப்புறல் வேண்டும்.
அண்மைக்காலங்களில் கொழும்பு சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் பின்னணி அவை எதனடிப்படையில் ஒட்டப்பட்டுள்ளதென்றால் அவை சமாதானத்திற்கு ஆப்பு வைப்பதாகவே அவை அமைந்துள்ளன.
நூற்றுக்கனக்கான புல்லட்டுகளை தாங்கிய இராணுவ வீரர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார் ஜனாதிபதி.இதனால் உணர்த்தப்படுவது யாது யுத்தம் என்பதாகும்.அப்படியாயின் இலங்கையில் சமாதானம் உயிர்துறந்து கொண்டிருக்கின்றது என்பதாகும்.
இன்று சமாதானத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டு விட்டதென்றே எண்ணத்தோன்றுகிறது.
ழ நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி மகாநாடு செயலிழந்துள்ளது.ழ போர் நிறுத்த உடன்படிக்கையைப் பற்றி எந்தவித உத்தரவாதமுமில்லை.ழ போர் நிறுத்த கண்கானிப்பக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ழ சர்வதேச சமூகம் அமைதிகாக்கின்றது.ழ நோர்வே சமாதான தூதுவர்கள் இடையிடையே முகம் காட்கின்றனர்.ழ வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.ழ தலைநகரிலும் ஏனைய புறங்களிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் அவர்கள் மீது பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் 'நில் படையணி" என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மேற்கூறப்பட்ட விடயங்களையா உணர்த்துகின்றது? அப்படியாயின் இச் சுவரொட்டி நியாயமானதென அரசாங்கம் கருதுமாயின் சுவரொட்டிக்கு அமைய ஜனாதிபதி அதே வழியில் செல்லுங்கள் தமிழர்கள் அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதை தடுக்கமுடியாது போகும்.
Thursday, February 22, 2007
நவீன ஊடகங்களின் வருகையினால் கருணாவை கண்டு கொண்டது உலகம்
கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு முற்பகுதியில் இலங்கையின் உள்நாட்டுப்போர் தீவிரமாக இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ இராணுவத்திற்கு எதிராகவோ (அரசாங்கத்திற்கு) வாய்திறந்து தமது உண்மையான விமர்சனங்களையும் நடுநிலைமையான கருத்துக்களையும் தெரிவிக்கமுடியாமல் தினறின அப்போதைய ஊடகங்கள்.விசேடமாக தமிழ்.
ஆனால் நவீன ஊடகங்களின் வருகையினால் இந்நிலைமை தகர்த்தெறியப்பட்டுள்ளது.உதாரணமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முன்பு விமர்சிக்கமுடியாததொரு சூழ்நிலையே காணப்பட்டது.அவ்வாறு செயற்பட்டால், ஊடகங்களின் வாய்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு அவை வரலாற்று சான்றுகளாகியுள்ளன.
இருந்த தமிழ் ஊடகங்களும் பெரும்பாலும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டும் வந்துள்ளன.
இணையத்தளங்கள், இணையத்தள வானொளிகள் மற்றும் இணையத்தள தொலைக்காட்சிகளின் வருகைகளினால்; ஒரு பக்க கருத்துக்கள் மாத்திரம் வெளியாகுவதனை தவிர இவற்றில் பலரது கருத்துக்களும் ஒலிக்கத் தொடங்கின.
அவற்றில் ஒரு விளைவாகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற கருணாவிற்கு சார்பாக மட்டும் இன்று 14 இணையத்தளங்கள் கருத்துக்களை பிரசுரித்து வருகின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே.
உண்மையில் சைபரின் வருகையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இவை.(நவீன ஊடகங்கள்).(இவை நன்மைக்கும் உபயோகப்படும் தீமைக்கும் உபயோகப்படும்)
Tuesday, February 20, 2007
கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?
எஸ்.நயனகணேசன் Picture by S.Thushan
கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?
இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் பாரிய நெருக்கடிக்கடிகளுக்கு மத்தியிலும் எந்தவித உத்தரவாதமுமில்லாத நிலையில். வாழந்து வருகின்றனர்.வடக்கு கிழக்கில் இன்று ஒரு படுகொலையாவது நிகழாமல் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றளவிற்கு வன்முறை கலாசாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதனை காணக்கூடியதாயுள்ளது.
தென்பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் இனவாத உணர்வலைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவற்றுக்கு ஆதரவாகவும் அவற்றுக்கு தீனிபோடும் வகையிலும் அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் என அனைவரும் அவ் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளதனையும் காணக்கூடியதாயுள்ளது.
இலங்கையில் இன்று தமிழர் மீது தினிக்கப்படும் வன்முறைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் இன்று முழு உலகமும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அன்மையில் புலிகளுடன் தொட்ர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையின்த்தை சேரந்த மூன்று சிஙகளவர்களின் பின்னனியில் இன்று அனைத்து தமிழர்களும் புலிகள் என்ற சந்தேகப்பார்வையில் பார்க்கும் படலம் ஆரம்பித்துள்ளதுடன் அவர்கள் மீதான கைதுகளும் அதிகரித்துள்ளன.
அதேவேளை தென்னிலங்கையில் யுத்தத்தினை தீவிரப்படுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் பேரினவாதிகள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதனை கொழும்பில் பல புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அவற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அது,
சமாதான புலிகள்
பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம்
பயங்கரவாதத்திற்கெதிரான இவ் அமைப்பின் தலைவர் அனுருத்த பிரதீப் ஆவார்.இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவராவார்.
இச்சுவரொட்டியின் கூற்றுக்கு அமைய இதுவொரு பயங்கரமான நிலைமையாகும்.அப்படியாயின் மற்றுமொரு பந்தியையும் இணைத்துக் கொள்ளல் வேண்டும்.அது ஆர்மி புலிகள் என்பதாகும்.இச்சுவரொட்டியில் அழிக்குமாறு கூறப்பட்டுள்ளது.அப்படியாயின் மனிதர்களையல்லவா கொலை செய்ய சொல்கின்றனர்.கொலை செய்யுமாறு சுவரொட்டி ஒட்டும் இவ்வியக்கம் கொலை செய்யாமல் இருக்குமா? கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக பொறுப்பின்றி எதனையும் கூறமுடியாது.கொலை செய்யப்படவேண்டுமென்பது ஒரு கொள்கையா?தமது கொள்கைகளுக்கு முரணாணவர்களை கொலை செய்யப்பட வேண்டுமென சமூகத்தை தூண்டுதல் பாரிய குற்றமாகும்.அதன் மூலம் இனச்சங்காரமே ஏற்படக்கூடும்.அவ்வாறு இடம்பெற்றால் அதற்கு யார் பொறுப்பு?
அதேவேளை இது தொடர்பாக சுற்றாடல் வள அமைச்சர் கடந்த வாரம் ராவய பத்திரிகையில் தெரிவித்திருந்த கருத்தையும் இங்கே பிரசுரிக்கின்றோம்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
இவன்களை மிச்சம் வைக்கவா சொல்கிறீர்கள்?சுற்றாடல் வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
நான் பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கத்தின் உறுப்பினர் அல்ல.ஆனால் நீங்கள் கூறுகின்ற அந்த போஸ்டருடன் நான் முழுமையாக இணங்குகின்றேன்.இன்று இலங்கையில் ஊடகவியலாளர்கள் என்பவன்கள் யார்?
தமிழ் இளைஞர்கள் என கூறப்படுபவர்கள் யார்?அப்படி எவனும் இல்லை.இவன்கள் எல்லோரும் வெளிநாட்டு நிதியில் தங்கியிருக்கும் என்ஜிஓகாரர்கள்.
சமாதானம், யுத்தத்திற்கெதிரான எனக்கூறிக்கொண்டு புலிகளை உருவாக்கியது மட்டுமன்றி நாட்டையும் காட்டிக் கொடுத்து தரகர் வேளை பார்ப்பதையே இந்த பேப்பர்காரர்கள் செய்கின்றனர்.இடது சாரிகள் எனக்கூறிக்கொள்ளும் கூட்டமும் இதனைத்தான் செய்கின்றது.நாட்டில் இருக்கும் சட்டங்களில் இவன்களை தடுக்க முடியாவிடில் முடிந்த எந்த முறையிலாவது அதனை செய்யவேண்டும்.ஆம்.
மனிதர்கள் இறக்கின்றார்கள் தான்.அதற்கு என்ன செய்ய முடியும்.இவன்களை மிச்சபடுத்தவா எங்களுக்கு கூறுகின்றீர்கள்.இவன்கள் தேசத்துரோகிகள்.
இந்த நாட்டில் இருக்கின்ற கழுதைத்தனமான சுதந்திரம் காரணமாகத்தான் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது.கூறப்படும் அந்த சட்டங்களில்இத்தேசத்துரோகிகளை தடுக்கமுடியாவிடில் முடிந்த விதத்தில் அதனை எமக்கு செய்யத் தெரியும்.ராவயைப் பற்றியும் எமக்குத் தெரியும்.ராவய என்ன செய்கின்றது என்பது பற்றியும் எமக்குத் தெரியும்.தமிழன்கள் இறக்கும் பொழுது ராவயவிற்கு கவலை என்றும் எமக்குத் தெரியும்.
ஹலோ நான் சொல்வது இதுதான்.போஸ்டர் அடித்து அடக்க முடியாவிடில் முடிந்த முறைகளிலாவது இவன்களை அடக்க வேண்டும்;.அதனால் தான் நான் இந்த போஸ்டருடன் அரசியல் ரீதியில் இணங்குகின்றேன் எனத் தெரிவித்தேன்.
நீங்கள் கூறும் இந்த போஸ்டர் தவறு என கூறி உங்களால் என்ன செய்யமுடியும்?
தர்மத்தை போதிக்க வேண்டிய பிக்குமார்கள் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம சென்றதுமட்டுமன்றி தமிழர்களுக்கு எதிராக சண்டமாருதம் செயதும் வருகின்றனர்..இதனையா அமைதியே உருவான போதி மாதவன் புத்தர் இவர்களுக்கு போதித்தார்.
யுத்தத்தில் வெற்றியடைந்த நாடுகள் உலகில் எங்கும் இல்லை என்ற உண்மை அறிந்தும் கூட தென்னிலங்கை அரசியல் சக்திகளும் அரசாங்கமும் யுத்தத்தில் தீவிர நம்பிக்கையைக் கொண்டு செயற்படுகின்றமை பாரிய அழிவிற்கே வழிவகுக்கும் என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
Monday, February 19, 2007
Thursday, February 15, 2007
மலருமா சமாதானம்?
Picture by S.Thushan
சில
நமது
அவை
பிட்டியகந்தை கதிர்
Monday, February 12, 2007
Thursday, February 8, 2007
எவரும் யோக்கியவாதிகள் அல்ல
ஆயுத போராட்டமும் ஊடக சுதந்திரமும்
கடந்த ஐந்தாம் திகதி இரவு எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது முன்னாள் ஊடகவியலாளரான லலித் செனவிரத்ன தமது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவமாகும்.அவரின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் மேற்கொண்டோம்.
மறு தினம் ஆறாம் திகதியும் எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது லலித் செனவிரத்ன உட்பட 'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினர் தாம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து தெற்கில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தியில் ஏற்பட்ட பரபரப்பினாலாகும். அந்த இரவிலேயே நாம் என்ன கூறப்போகின்றோம் என்ற கேள்வி எழுந்துது புகையிரத சங்க சம்மேளனத்தின் இரு மாத வெளியீடான 'அக்குண" பத்திரிகையின் செயற்பாட்டாளரான லலித் செனவிரத்ன,சிசிற பிரியங்கர மற்றும் நிஹால் சேரசிங்ஹ ஆகிய மூவரும் கடந்த 05 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளனர்.கடத்திச் செல்லல் என்பது ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளை கவனத்திற்கொள்ளாது யாரோ ஒருவர் கடத்திச் செல்வதாகும்.
நாம் அவ் மூன்று கடத்தல்களையும் கண்டித்துள்ளோம்.அவர்கள் அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்தின் மூலமாவது கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் கோரியிருந்தோம்.
புலிகளுடனான தொடர்பு
மறு நாள் அம் மூவரும் தாம் ஆயுத போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை பற்றிக் கொள்ளுதலை நம்பும் புதிய காலணித்துவத்திற்கு எதிரான இயக்க பங்காளர்களென தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை விட விடுதலைப்புலிகள் அமைப்புடன்; இணைந்து செயற்படுவதாகவும் தெற்கில் பல ஆயுத வன்முறைகளை மேற்கொண்டுள்ளதனை ஏற் றுக்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது வெளியாகியுள்ள இவ் வெளிச்சம் காரணமாக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டபோது நாம் தெரிவித்த கருத்து குற்றமாகுமா? நாம் அவர்களின் ஆயுத போராட்டத்திற்கு மறைமுகமான பங்காளர்களாகின்றோமா?
லலித் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முதலாவதாக கிடைத்த தகவல் கடந்த 05 ஆம் திகதி இரவு 11.30 மணிக்காகும். அந்நேரத்திற்குள் அவரது மனைவி மேலும் இரு ஊடக நண்பர்களுடன் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்தனர்.அத்துருகிரிய பொலிசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தனர்.
வாசுவின் தகவல்
அதன் பின்னர் காணாமல் போனவர்களை தேடும் குழுவின் சகோதரர் வாசுவுடன் தொடர்பு கொண்டோம்.அவர் உடனடியாக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விட்டு பின்னர் அவர் தெரிவித்ததாவது இரகசிய பொலிஸார் லலித் செனிவிரத்னவை கைது செய்யவில்லையென அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
லலித்தை கூட்டிச் சென்றவர்கள் தாம் இரகசிய பொலிசார் என்;று தெரிவித்தனர் என லலித்தின் மனைவி காந்தி தெரிவித்தார்.ஆனால் சகோதரர் வாசுதேவ கதைத்பொழுது அவருக்கு தமக்கு எதுவும் தெரியதென இரகசிய பொலிஸார் தெரிவித்ததாக தெரிவித்தார்.நாம் இக்கடத்தல் தொடர்பாக நாட்டுக்கும் உலகிற்கும் தெரிவிப்பதற்கு தீர்மானித்ததாவது அவரை தேடிக்கொள்வதற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்னராகும்.நாம் எடுத்த அம்முடிவு அடிப்படை மனித உரிமையினை பாதுகாத்துக்கொள்வதற்கிருக்கும் உரிமையை செயற்படுத்துவதற்காகும்.
மஹிந்த ராஜபக்~வின் இறந்த காலம்
மஹிந்த ராஜபக்~ அவர்களும் 1988 -90 காலப்பகுதிகளில் எம்முடன் இணைந்து அந்தக் காலங்களில் கடத்தல்களுக்கு எதிராக ஆதரவு வழங்கியுள்ளதினால் அவருக்கும் இதனை ஞாபகப்படுத்துதல் சிறந்தது என சிந்தித்தோம்.முயற்சித்தோம்.தெற்கின் பயங்கரவாதத்தை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டே மஹிந்த ராஜபக்~ அவர்கள் அந்தக் காலங்களில் எம்முடன் இணைந்து கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.ஜனாதிபதியாவதற்குரிய பிரபல்யம் கிடைத்தமையும் இவ்வாறான கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டு கட்டியெழுப்பிய 'மௌ பெரமுன" அமைப்பினூடாகும்.
கடத்திச் செல்லப்படுவது ஆயுத குலுக்கல் மூலமோ அரசாங்கத்தினாலோ கடத்திச் செல்லப்படும் நபர்களின் அரசியல் செயற்பாட்டை கவனத்திற் கொள்ளாது அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பிரதாயமொன்றுள்ளது.இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது அவ்வாறான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.கட்டியெழுப்பியுள்ளனர்.
ஆனால் நிலையானதொரு அடிப்படையின் கீழ் சட்டத்தின் ஆட்சிக்கமைய செயற்படுமாறு கடத்திச் செல்லல் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றிற்கு எதிராக செயற்பட்டுள்ளமை இந்நாட்டின் மனித உரிமை இயக்கங்களில் சிற்சில நபர்களினால் மட்டுமே குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட தொழிற்சங்க ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பாக நாம் அதவாது சுதந்திர ஊடக இயக்கம் மேற்கொண்ட மற்றும் தெரிவித்திருந்த நிலைப்பாடுகள் மற்றும் வரலாற்று அனுபவங்களினடிப்படையிலே நாம் மனித உரிமைகளை பாதுகாப்பது.
சரியான சவால்
ஜனநாயக சமூகமொன்றில் ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் சரியான சவால் அமைதியான சூழலில் ஏற்படாது.ஜனநாயகமல்லாத இயக்கங்களுக்கு முகம் கொடுக்கையிலாகும்.ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் மற்றும் கொலை செய்தல் ஆகியவற்றை கண்டிப்பதற்கு ஜனநாயக இயக்கங்களுக்கு உரிமையுள்ளது.துரதி~;டவசமாக அவ்வாறான இயக்கங்கள் இன்று அரிது.சாள்ஸ் அபேசேகர போன்றோர் சிவில் சமூக இயக்கங்களில் இல்லாததினால் இன்று மஹிந்த ராஜபக்~ போன்றோரும் எதிர்க்கட்சியில் இல்லை.
பின்னொரு காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் நிலைகளைக் கொண்ட அரசியல் குழுக்கல் 1983 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் ஆயுத இயக்கங்களுடன் இணைந்து தெற்கில் புரட்சி இயக்கங்களை கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.வடக்கிற்கு சென்று பயிற்களைக் கூட பெற்றுக் கொண்டுள்ளனர்.நிதியைத் திரட்டிக் கொள்வதற்காக கொள்ளைகளிலும் ஈடுபட்டனர்.அவர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வாறான கடத்தல்களின் மூலமே கைது செய்யப்பட்டனர்.அப்பொழுது சார்ள்ஸ் அபேசேகர தலைமைத்துவத்தின் கீழ் போசனையடைந்த மனித உரிமை அமைப்பு அக்கடத்தல்களை கண்டித்தது மட்டுமன்றி அவர்களுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் என்ற பெயரில் பரந்தலவிலான முன்னணியொன்றும் கட்டியெழுப்பியது.
இன்று 'அக்குண" ஊடக செயற்பாட்டாளர்களின் கடத்தலுக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் வெளிக்காட்டிய எதிர்ப்பு தவறானதென்றோ அல்லது அதற்கும் அப்பால் துரோகமென கருதும் நபர்கள் அந்த வரலாற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளல் சிறந்ததாகும்.நாம் அதன் அடிப்படையிலே தங்கியிருக்கின்றோம்.
இராணுவத்தைச் சேர்ந்தோர்
மேலும் ஒரு விடயத்தை கூற வேண்டும்.ஊடகவியலாளர்கள் மத்தியில் எல்டிடிஈ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி ஊடக சுதந்திரத்திற்காக முன்நிற்கும் அனைவரும் பீதியடையும் நிலையிலுள்ளனர். இராணுவத்திற்குள்ளும் அவ்வாறான நபர்கள் இருக்கின்றார்கள் என இராணுவம் தெரிவிக்கின்றதனையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறான குற்றச்சாட்டுக்கள்; முன்வைக்கப்பட்ட சிலர் பின்னர் குற்றவாளிகலள்ள என தீர்மானிக்கப்பட்டதுடன் அதனை ஊடகங்களும் அறிக்கையிட்டன.
Tuesday, February 6, 2007
கடத்திச் செல்லப்பட்ட அக்குண பத்திரிகையின் ஊடகவியலாளர்களை விடுதலை செய்
06.02.2007
'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினரை கடத்தல்
சிசிற பிரியங்கர கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புகையிரத சங்க சம்மேளனமும் நிஹால் சேரசிங்ஹ கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கமுமம் எம்.எல்.செனவிரத்ன கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி மூலமும் சுதந்திர ஊடகம் உறுதி செய்து கொண்டுள்ளது.இது தொடர்பாக முறையே தெமட்டகொட மற்றும் அத்துருகிரியை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரவு 11.30 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளிப்பதற்கு தாம் பனிபுரியும் இடத்திற்கு சென்ற சிசிற பிரியங்க மீண்டும் திரும்பவில்லை.நிஹால் சேரசிங்ஹ கடந்த 05 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு இரு குழந்தைகளின் தந்தையாவார்;.(ஆறு வயது மற்றும் ஒரு வயதில்)
அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு நிஹால் சேரசிங்ஹ தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவர் ஒரு குழந்தையின் தந்தையாவார்.(ஆறு வயது)
மேலும் அமைச்சர்களின் சம்பளம் மட்டும் அதிகரிப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்த்தில் மனுவொன்றை முன்வைத்து பின்னர் நிராகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனு ஆகியவற்றின் முன்னோடியான செயற்பாடுகளை மேற்கொண்டது இலங்கை புகையிரத சங்க சம்ளேனமாகும்.இக்கைது செய்தல் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமான முறையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நபர்கள் தொடர்பாக ஏதாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் அது சட்டத்தின் நிர்வாகத்திற்கேற்பவே மேற்கொள்ளப்பட வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகின்றது.
இந்நபர்கள் அரசாங்கத்தின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களது உயிரை பாதுகாக்குமாறும் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் தேவையான சட்ட உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.இவ் சட்டவிரோத கைது செய்தலை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும் சுதந்திர ஊடக இயக்கம் இவ் சட்டவிரோத கைது செய்தலையும் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் இடமாகும்பொழுது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் பாதுகாப்பு கிடைக்காது போகுமென இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகின்றது.
Monday, February 5, 2007
ஊடகங்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறைகள்

'எனது மகள் மீது பயங்கரவாதியென பழி சுமத்துவது அநியாயம்.எனது மகள் பயங்கரவாதியும் அல்ல புலியும் அல்ல.விசாரணை செய்வதாக சீ ஐ டியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால் அவற்றில் ஒன்றும் உண்மையில்லை.தேடவேண்டிய தேவை இருந்திருப்பின் தகவல்களை தேடியிருக்கலாம்" என கவலை தோய்ந்த முகத்துடன் எதுவித குற்றச்சாடடடுக்களுமின்றியும் விசாரணைகளுமின்றியும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் செய்தியாளரான பரமேஸ்வரியின் தந்தை முனுசாமி தெரிவிக்கின்றார்.
கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் வைத்து மௌபிம என்ற வார பத்திரிகையின் ஊடகவியலாளரான முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
இவரின் விடுதலைக்காக இலங்கையில் இயங்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் , ஊடக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என அனைவரும் இணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அவரை விடுதலை செய்வதில் அரசாங்கம் மெனமாகவே இருந்து வருகின்றது.
இவரின் விடுதலைக்காக தேசய மட்டத்தில் அண்மைக்காலம் வரை மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு ஆதரவு செதரிவித்து கடந்த 31 ஆம் திகதி சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்களும் பிரச்சாரத்தினை மேற்கொண்டன.இதில் முக்கிய விடயம் யாதெனில் இன்று மரணப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையின் ஊடகவியலை காப்பாற்றுவதற்கு அரச மட்டத்தில் எந்தவிதமான உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லையென்பதாகும்.அவற்றினை அரசாங்கம் மேற்கொள்வதற்கு பதிலாக அவற்றை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.இவற்றுக்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொண்டு செல்லும் பத்திரிகை அச்சுக்கான மூலப் பொருள் தடையை கூறலாம்.அது மட்டுமன்றி மறைமுகமாக யாழில் வாழும் ஆறு லட்சம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தினை நசுக்கும் உரு செயலாகவே இதனை எண்ணத் தோன்றுகிறது.
எந்தவொரு யுத்தத்திலும் முதலில் உயிர் துறப்பது உண்மையே.அது இன்று இலங்கையில் அமோகமாக அரச தரப்பில் விமர்சையாக மேற்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இவை இவ்வாறிருக்கையில் கடந்த வருடம் உலக பத்திரிகை சுதந்திர தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டு போது அதில் பங்கேற்றிய சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்தோபர் வொறன் 'இலங்கையின் ஊடகவியல் மரணப்பொறிக்குள்" எனத் தெரிவித்திருந்த கூற்;று இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் அக்கூற்றுக்கு மேலம் வலுச்சேர்த்துள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யக் கோரி சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் (International Fedaration of Journalists) மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement) ஆகிய ஊடக அமைப்புக்கள் உட்பட இலங்கையின் ஏனைய ஊடக அமைப்புக்கள் அவரை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி விடுத்திருக்கின்ற அறிக்கை மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொண்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
மிகவும் ஆக்கப்பூர்வான அறிக்கை பரமேஸ்வரியை விடுதலை செய்வதற்கு அரசாங்கததிற்கு அழுத்தத்தினை வழங்கும் என நம்புகின்றோம். இல்லாவிடில் தொடர்ந்தும் ஊடகவியலாளர் கொலை செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் நீண்டு செல்வதற்இடமளிப்பதா என்பதனை நாம் பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.
Tuesday, January 30, 2007
பரமேஸ்வரியை விடுதலை செய்யுங்கள்

அதிமேதகு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
பரமேஸ்வரியை விடுதலை செய்யுங்கள்
பயங்கரவாத புலயனாய்வு பிரிவினரால் கடந்த 60 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை (23) உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருவதற்கான பிரச்சாரத்தின் சார்பாக நான் அல்லது எனது நிறுவனம் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமும் சுதந்திர ஊடகவியலாளர் சம்மேளனமும் இணைந்து ஆரம்பித்துள்ள மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சாரத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் து~;பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
உண்மையுள்ள.
ஜனாதிபதி அலுவலகம் தொலைநகல் : 0112424840 , 0112333717
- பிரதம மந்திரி அலுவலகம் தொலை நகல் : 0112575454
Tuesday, January 23, 2007
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்கு கொழும்பு கோட்டையில் கூடினர் ஊடகவியலாளர்கள்
கொழும்பிலிருந்து துஷான்
படப்பிடிப்பு:உவிந்து
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களும் அழுத்;தங்களும் மற்றும் தாக்குதல்களும் மீண்டும் அண்மைக்காலம் முதல் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றதனை தெளிவாக காணக்கூடிதாயுள்ளது.இதிலுள்ள மிகவும் துரதி~;டவசமான சம்பவமானது இவ் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் மற்றும் தாக்குதலுக்கும் அல்லது கொலைகளுக்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதை உரிய அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக தவிர்த்துக் கொண்டு செல்வதாகும்.காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பது ஆபத்திற்குள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நியாயப்படுத்தல் மற்றும் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.இடம்பெற்ற சம்பவங்களே கீழே குறிப்பிடப்படுகின்றன.
2006 2007 ஆம் வருடத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகப்பணியாளர்கள் 06 ஆகும்.ஒரு கடத்தல்
ஊடகவியலாளர் சம்பத் லக்மால்
ஊடகவியலாளர் சுகிர்தராஜன்
யாழ்ப்பாணத்தில் ஊடகப் பணியாளர்கள் 06 பேர்
ஊடகவியலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த குறுகிய காலத்திற்குள் இரு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மௌனசாமி பரமேஸ்வரி – மௌபிம (எந்தவொரு குற்றச்சாட்டினையும் முன்வைக்காது 60 நாட்களுக்கு மேலாக கைது செய்து தடுத்து வைத்துக்கொண்டுள்ளதுடன் அவரின் நலன்களையும் துன்பங்களையும் விசாரிப்பதற்கு ஊடக அமைப்புக்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் இடமளிக்கவில்லை)
குமாரவேல் கஜன் - தினக்குரல் (ஒப்பு நோக்காளர்.கடந்த 12 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்)
ஐவர் தாக்குதலுக்கிலக்காகியுள்ளனர்
தெரண தொலைக்காட்சியின் சாரங்க சுயாதீன தொலைக்காட்சின் சுதர்மன்
லங்கா ஈ நிவுஸின் அஜித் ஹரய ஆசிரியர் கொத்திகொட
சண்டே லீடரின் அசோக்க
ஏழு நபர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது
பந்துல பத்மகுமார லசந்த விகரமதுங்க
விக்டர் ஐவர் சுனந்த தேசப்பிரிய
ஸ்ரீ ரங்கா ருவன் பர்டினன்ட்ஸ்
சந்தருவன் சேனாதீர
ரோஹித பா~ன ( உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
அநுருத்த லொக்குஹபுஆராச்சி (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
ராஜ் நிமல் (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
அதிகளவான ஊடகவியலாளர்களுக்கும் பல ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
• மௌபிம மற்றும் சண்டே லீடர் பத்திரிகைகளுக்கு எதிரான இடையூறுகள்
• லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தல்
• யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை
• லங்கா பத்திரிகை அச்சகத்திற்கு தீவைப்பு
• கிழக்கு மாகாணத்தில் வீரகேசரி,தினக்குரல் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் விநியோகத்திற்கு எதிராக ஆயுதக்குழுக்கல் மூலம் விடுக்கப்பட்டுள்ள தடைகள்.
• சண்டே லீடரின் ரங்க ,யோதசிங்ஹ மற்றும் சிலுமினவின் பிரசன்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பொலிசார் மூலம் புதிய சட்ட திட்டங்களின் கீழ் விசாரணை செய்துள்ளதுடன் செய்தி மூலங்களை வெளியிடுமாறு வற்புறுத்தல்.
• யாழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற தடைகள்
• பொலன்னறுவை ராஜவீரசிங்ஹ பகிரங்க கூட்டமொன்றை ஆவணம் செய்துகொண்டிருக்கும் பொழுது வெளியேற்றியமை.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்,ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்,இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்,சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய ஐந்து ஊடக அமைப்புக்களே இவ் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்திருந்தன.
பெரும்பான்மையின பேரினவாதிகளின் அடக்குமுறைக்குள்ளாகும் மலையக பெருந்தோட்டங்கள்
இலங்கையில் அண்மைக்காலம் முதல் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களால் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே அவற்றுக்கு வெளியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள்; பெரும் இனவாத அடக்கு முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு வெளிப்பாடாக அண்மையில் கொண்ணடாடப்பட்ட பொங்கள் விழா தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையை மேற்கொள்ளும் சிங்கள நபரொருவரை தமிழ் இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.இதன்; பின்னர் இச்சம்பவம் சிங்கள தமிழ் கலவரமாக உருவெடுக்கும் வகையில் சிங்கள காடையர் கும்பலொன்று பொங்கள் தினத்தன்று தமிழ் இளைஞர்களை தாக்குவதற்கு முற்பட்டமை அவர்களின் இனவாத போக்கினை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து சிங்கள காடையர் கும்பலுக்கு இடமளிக்காதிருப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
Thursday, January 11, 2007
மலையகத்தை யுத்த பீதிக்குள்ளாக்கும் இனாவத ஊடகங்களின் ஊடகப்பிரயோகம்
நாட்டின் இனப்பிரச்சினை இன்று உக்கிரமடைந்து செல்லும் இந்நிலையில் மலையகத்தில் வாழும் மக்களும் புலிகள் என்று அவர்கள் மீது முத்திரை குத்துவதற்கு பேரினவாதிகளும் இனவாத ஊடகங்களும் பிரயத்தனம் செய்து வருகின்றமை எதிர்காலத்தில் அம்மக்களின் நிம்மதியான வாழ்க்கையை சீர்குலைக்கும் ஓர் இழிசெயலாகும்.
ஜே.வி.பி கட்சியின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி வாராந்தம் பிரசுரமாகும் 'லங்கா" என்ற சிங்கள பத்திரிகை, கடந்த 07 ஆம் திகதி வெளியான தமது வார இதழில் 'புனித மலர்" என்ற பெயருடன் 10 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் 'பெருந்தோட்டங்களையும் புலிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கும் முயற்சியொன்று' என்ற தலைப்புடன் பெருந்தோட்டங்களில் வாழ்பவர்களும் புலி சந்தேகநபர்களென்ற புரளியை கிளப்பி விட்டுள்ளது.
அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது, கொழும்பு நகர் உட்பட நாட்டின் எந்தவொரு பிரதேசத்திற்கும் சுதந்திரமாக சென்று வருவதற்குள்ள தன்மை மற்றும் சிங்கள மொழியை சரளமாக பிரயோகிப்பதற்குள்ள திறமை காரணமாக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்துவதற்கு புலிகளின் புலனாய்வு பிரிவு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு தரப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு மாகாணங்கள் என்பதனால் இங்கு பாரியளவில் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
நீண்டகாலமாக அமைதியான முறையில் தோட்டங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்ட புலிகள் இயக்கம் தற்பொழுது அவர்களின் செயற்பாடுகளை பாரியளவில் மேற்கொள்வதற்கு தோட்ட இளைஞர்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்~;மன் கதிர்காமரின் புல்லர்ஸ் ஒழுங்கையில் அமைந்திருந்த வீட்டை வீடியோ படம் பிடித்துக்கொண்டிக்கையில் கைது செய்யப்பட்ட பசறை கோணாகலை தோட்டத்தைச் சேர்ந்த துவில் இத்தியம் மற்றும் பசறை வீதியைச் சேர்ந்த ஜகனம் என்ற இருவரும் ஊவாவை சேர்ந்தவர்களாகும்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மூலம் ஊவா பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னர் பதுளை திக்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த எட்டு புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்தனர். அதேவேளை பதுளை ரிதீபான தோட்டத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டார். அத்துடன் பதுளை லுனுகலை பொலிஸ் அதிகாரியொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இரு புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை பதுளை யூரி தோட்டத்தில் ஈழக்கொடியொன்று ஏற்றப்பட்டிருந்ததுடன் அக்கொடி ஜே.வி.பியுடன் தொடர்புடைய சில இளைஞர்களால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான தோட்ட பிரதேசங்களில் மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு ஆயுதங்களின்றி உடல் ரீதியிலான போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவற்றுக்கு மத்தியில் வெலிமடை ஒரிக் தோட்டம் மற்றும் அம்பேவெல தோட்டங்களை அண்மித்த பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய நான்கு தமிழ் இளைஞர்களையும் இரு யுவதிகளையும் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர். இவர்களிருவரும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவார்கள்.
குடும்ப நல சேவையாளர் சீருடைக்கு சமமான ஆடையுடன் பதுளை பெரிய ஆஸ்பத்திரிக்கு அருகில் வைத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் பதுளை நகரில் பயன்படுத்தப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் ஏழு வான்களும் காணாமல் போயுள்ளதாகவும் இவை புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவு சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றது.
தற்பொழுது பதுளை மாவட்டத்தில் அதிகளவான தோட்;டங்களை அண்டிய பகுதிகளில் புலிப்பயங்கரவாதிகள் மூலம் நிதி சேகரித்தல் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடனும் தோட்டங்களில் பாரியளவிலான இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் போர் பயற்சிகளை பெற்றுவிட்டு தோட்டங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை பேணிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொனராகலை, பிபிலை மற்றும் படல்கும்புர ஆகிய பிரதேசங்களில் இவர்கள் சிங்கள யுவதிகளை திருமணமுடித்துள்ளனர். அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தினர் மூலம் மொனராகலையை அண்மித்துள்ள அதிமலை, கொட்டியாகலை, கேகலுயாய ஆகிய கிராமங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பாரியளவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.
தோட்ங்களுக்கு புலிகள் இயக்கத்தினர் வந்து செல்லும் ஆபத்தினை கருத்திற்கொண்டு தோட்ட முகாமையாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அண்மையில் ஊவா மாகாணத்தில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாவட்டத்தின் 62 தோட்டங்களில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர நுவரெலியா, அட்டன், கண்டி மற்றும் கம்பளை அகிய தோட்டங்களிலும் அதிகளவிலான புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.
அதேவேளை நுவரெலியா இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்ட முதலாவது புலனாய்வு அதிகாரியாவார். இவர் தோட்ட பிரதேசங்களை புலனாய்வு செய்து வந்தவராவார்.
தோட்டங்களில் புலிகளின் செயற்பாடுகள் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஊவா மாகாணத்திற்காக புலிகள் இயக்கத்தினர் மூலம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மட்டக்களப்பு செங்கலடியில் அமைந்துள்ள முகாமிலிருந்து செயற்படுவதாகவும் புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தோட்டப் பகுதிகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு தோட்டங்களில் இயங்கும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புக்களிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கின்றது. இவ் அமைப்புக்கள் தோட்டடப் பகுதிகளில் ஈழக்கொள்கையை பரப்புவதற்கு திடமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் ஊவா மாகாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் மீது மட்டும் எமது கவனம் திரும்பியுள்ளது. அவ் அமைப்பு ஊவா மாகாண சபையிலுள்ள தமிழ் அரசியல் வாதியொருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் அமைப்பு தோட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளை புலிகள் இயக்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் நுட்பமான முறையில் செயற்பட்டு வருவதனை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரையாளர் மேலும் அப்புத்தளை, பூனாகலை, பண்டாரவளை, மடுல்சீமை, ஹீனகலை, பசறை, அடாவத்தை, கந்தேகெதர, ரங்கமலேவத்தை, நாரங்கலை, சார்னியா தோட்டம் மற்றும் நக்கல தோட்டம் ஆகிய தோட்டங்களிலும் புலிகளின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவம் கண்டுபிடித்தள்ளார்.
இக்கட்டுரையில் பிரசுரமான தகவல்கள் தொடர்பாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ் ஈழத்திற்கு வெளியில் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றவர்கள். இன்று சகலரும் எமது எழுச்சியை ஆதரிக்கின்றனர். எங்களுடைய துன்பத்திலும் வேதனையிலும் பங்கெற்கின்றவர்களாக காணப்படுகின்றனர்.
அது அமெரிக்காவானாலும் சரி மலையகமென்றாலும் சரி நாம் படும் துன்பங்களுக்காக வருந்தகின்றனர். இலங்கை அரசாங்கம் மற்றும் பேரினவாத அரசியல் சக்திகள் தமிழர்கள் மீது பழி சொல்லி அச்சுறுத்தி வாக்கு பெற்றுள்ளமையே சிங்கள அரசாங்கத்தின் வரலாறு. அதன் அடிப்படையிலே பேரினவாத சிந்தனையுடன் அக்கட்டுரையில் தகவல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
யூரி என்ற தோட்டத்தில் ஈழக் கொடியொன்று ஏற்றப்பட்டதா என எனக்கு தெரியாது. ஆனால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையோ புலனாய்வு நடவடிக்கைகளையோ எமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வெளியில் மேற்கொள்வதில்லை என்று அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஊவா மாகாண சபையின் உறுப்பினர் கா.வேலாயுதத்திடம் கருத்துக் கோட்டபோது இந்த பத்திரிகை அமைதியாக இருக்கும் மலையக இளைஞர்களின் மனதை வேறு திசைக்கு திருப்பும் ஓர் செயலாகும். பதுளை புலிகளின் மாகாணம் அல்ல. இங்கு சகல இன மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றாய் வாழும் மாகாணமாகும்.
மலையக சமூகம் பற்றி தப்பான கண்ணோட்டத்தில் வெளியிட்டுள்ள அக் கட்டுரையில் எவ்வித உண்மையும் இல்லை. மலையக இளைஞர்களை புலிகளென சித்திரிப்பதற்கு முயற்சியெடுத்துள்ளமை முற்றிலும் தவறானது. இப்பத்திரிகை இதன் மூலம் மலையகத்தில் யுத்த பீதியை ஏற்படுத்தவதற்கு முயற்சிசெய்துள்ளது. இது அம்மக்களை பொருளாதார ரீதியில் முடக்கும் ஓர் செயலெனவும் அவர் தமது விசனத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியிடம் கேட்டபோது எமக்கும் புலனாய்வு பிரிவிலிருந்து தகவல்கல் கிடைத்தள்ளன, பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதாக. இதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை எவ்வாறிருப்பினும் உறுதியற்ற சாட்சிகளின்றி தகவல்களை வெளியிட்;டிருப்பதால் இம்மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கடமையாகும். இதனால் அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
இவ்வாறான இனவாத கண்ணோட்டத்தில் செயற்படும் ஊடகங்களிடம் நாம் கேட்டுக்கொள்வது தமிழ் சமூகங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாதிருங்கள் என்பதாகும்.
Tuesday, January 9, 2007
Friday, January 5, 2007
'மன்னாரில் இறந்த சிறுவர்கள் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவைவையில் இறந்த சிறுவர்களும் புலிகளே"

by tamilnet
Mannar attack
எஸ். நயனகணேசன்
வடக்கு கிழக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் தினமும் அப்பாவி பொது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை.
அந்த வகையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தத்தினை சிங்கள மக்களுக்கு மாறுபட்ட வகையிலும் பாரபட்சமான முறையிலும் அரசின் செயற்பாடுகளுக்கு ஜால்ரா போடும் வகையிலும் செயற்பட்டு வருகின்றமை இவ் யுத்தத்திற்கு வலுச் சேர்க்கின்றது.
கடந்த பல வருடங்களாக சிங்கள பேரினவாத ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த உளவியல் ரீதியிலான ஊடகப் போர் இன்று அது முழு அளவிலான ஊடகப் போராக உருவெடுத்துள்ளதனை அவ் ஊடகங்களின் செய்தியறிக்கைகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது.
இன்று அரசாங்கமும் விடுதலை புலிகள் மீதான போரை முழு அளவில் மேற்கொள்வதற்காக நாட்டின் அனைத்து மக்களுக்கும் அறைகூவல் விடுத்திருக்கின்றதனை அதன் செயற்பாடுகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது. போர் என்ற பெயரில்

by Anurudha lokuapuarachchi
Kepittigollewa attack
பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அரச படைகள்.
2007 ஆம் வருடத்தின் ஆரம்ப வைபவமாக அரச படைகள் மன்னார் படகுத்துறை கிராமத்தில் தமது காட்டுமிராண்டித்தனத்தை அப்பாவி பொது மக்கள் மீது எடுத்தக்காட்டியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு புலிகள் என்ற முத்திரையையும் குத்தியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினை அன்று இந்தளவு உக்கிரமடைந்தமைக்கு ஆட்சியிலமர்ந்த பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமன்றி பேரினவாத ஊடகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை பெரும்பான்மை சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரினவாத ஊடகங்கள் அவ் வன்முறைகளை திரிபுபடுத்தியும் மாறுபட்ட வகையிலும் சிங்கள சமூகத்தினருக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வாறான ஊடக பிரயோகத்தின் விளைவாக 'சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற வினாவை வியப்புடன் கேட்குமளவிற்கு விசித்திரமாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி படகுத்துறை கிராமம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமை உலகறிந்த உண்மையாகும். அத்தாக்குதலில் சிறுவர்கள், பொதுமக்கள் உயிரழந்தமைக்கு புகைப்படங்களுடன் சாட்சிகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு பிரிவு அலுவலகம் கடந்த 03 ஆம் திகதி விடுத்த அறிக்கையிலும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் விடுத்த அறிக்கையில் 1995 ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்களே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தமது கண்டனத்தையும், கவலையையும் மற்றும் உண்மைச் சம்பவத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.
இத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று மாலை முழு உலகிற்கும் ராய்ட்டர் செய்திச் சேவை மற்றும் பிபிசி ஏஎப்பி ஆகிய செய்தி சேவைகளும் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்திருந்தன.
சிங்கள பத்திரிகைகளை தவிர பிரதான தர தமிழ் பத்திரிகைகள் மூன்றும் புகைப்படங்களுடன் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
ஆங்கிலப் பத்திரிகைகள் பல்வேறுபட்ட வகையில் செய்திகளை பிரசுரித்திருந்தன. ஆனால் அவை எந்தவகையிலாவது பொது மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதனை குறிப்பிட்டுள்ளன. டெய்லி மிரர் மற்றும் மோர்னிங் லீடர் ஆகிய பத்திரிகைகள் அனைத்து தரப்பையும் ஆவணப்படுத்தியிருந்தன. ஆனால் காயமடைந்தவர்களின் புகைப்படத்தினை பிரசுரிப்பதற்கு மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு மட்டுமே தைரியம் ஈரந்துள்ளது.
சிங்கள நாளிதழ்களில் லக்பிம பத்திரிகை '300 கடற் புலிகள் கூடியிருந்த புலிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதல். இத்தாக்குதலில் 30 புலி உறுப்பினர்கள் மரணம்". என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவலையும் பிரசுரிக்கவில்லை. அவ்வாறான செய்தியை அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் லக்பிம பத்திரிகை மிகப் பாரிய பொய்யை தமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
வழமைக்கு மாறாக செய்திகளை (வடக்கு கிழக்கு செய்திகளை மட்டும்) பிரசுரிக்கும் திவயின பத்திரிகை பெரிதாக அச்சம்பவத்தினை அறிக்கையிடவில்லை. லங்காதீப பத்திரிகை அச்சம்பவத்தினை முன்பக்க செய்தியாக பிரசுரித்திருந்தது.
தமிழ் பிரதேசங்களில் தமிழர்கள், சிறுவர்கள் , பெண்கள் கொலை செய்யப்படும் பொழுது சிங்கள நாளிதழ்கள் அவற்றை பிரசுரிப்பதில்லை. இது ஊடக ஒழுக்க நெறிக்கு முற்றிலும் புறம்பானது. சிங்கள நாளிதழ்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்லவின் கூற்றுக்கு படகுத்துறையில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகளாவார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் ஜுன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் வங்காலை தோமஸ்புரியில் குடும்பமொன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இது வரையில் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையிலே மற்றுமொறு கோரத்தாண்டவம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கும் சொல்லுவார்களா? சாக்கு போக்கு. அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வியை அரசாங்கத்திடமும் சிங்கள ஊடகங்களிடமும் கேட்கின்றோம்.