Thursday, November 23, 2006

இடையூறு தழிழனிற்கு நேர்ந்தபோது


எஸ்நயனகணேசன்
படடப்பிடிப்பு :- துஷான்


எந்தவொரு நாட்டிலாவது இவ்வாறானதொரு கதையை உங்களால் நம்ப முடியுமா?
கிளர்ச்சியாளர்கள் பிரபல்யமான பாடசாலையருகில் குணடடொன்றை வெடிக்க வைத்ததில் இராணுவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.பின்னர் இராணுவத்தினரில் சிலர் பாடசாலையின் பாதுகாப்பிற்காகவென கூறிக்கொண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாதுகாப்பிற்காக நிலத்தில் படுத்துக் கிடந்த மாணவர்களை நேராக நிற்கவைத்து சுட்டுள்ளனர்.அதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.பல மாணவர்கள் காயமடைந்தனர்.
அந்த நாட்டின் தேசிய பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடகங்களென தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள் இவ் மாணவப் படுகொலையினை அறிக்கையிடவில்லை.குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது பொது மக்கள் உயிரிழந்தாகவே அவை தெரிவிக்கின்றன.
யுத்தத்தின் போது கொல்லப்படும் சாதாரணமக்களின் உரிமைகளுக்காக முன்னிற்காத ஊடகங்கள் யாருடைய தேவைகளுக்காக செயற்படுகின்றன?
நாம் இதன் உண்மையான சம்பவத்தினை பார்ப்போம்.
கடந்த 17 ஆம் திகதி வவுனியா விவசாயக் கல்லூரிக்கறுகில் கிளைமோர் குண்டொன்று வெடித்ததில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் படையினரில் சிலர் விவசாயக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களுக்கு வெடிவைத்துள்ளனர்.அதில் ஐவர் உயிரிழந்ததுடன் பத்து பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வவுனியாவைச் சேர்ந்த அச்சுதன் சிந்துஜன்,திருகோணமலையைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரி~;வான் மொஹமட் ஆகிய மாணவர்களாவார்களே உயிரிழந்தவர்களாவார்கள்.
போர் நிறுத்தக்கண்கானிப்புக் குழுவும் இச்சம்பவத்தினை உறுதி செய்துள்ளது.அதே வேளை கடந்த திங்கட் கிழமை வவுனியா மடட்டக்களப்பு நகரில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஹர்த்தாலொன்றும் நடைபெறறுள்ளது.இந்நாட்டின் தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவவத்தினை பிரதான தலைப்பு செய்திகளாக உரிய விதத்தில் பிரசுரித்திருந்தன.பலர் இப்படுகொலை பற்றி சுவர்னவாஹினியில் ஒலிபரப்பாகும் 'முதற்பக்கம்" நிகழ்ச்சியில் பந்துல பத்குமாரவினால் தெரவிக்கப்பட்ட போதே தெரியவந்திருக்கக்கூடும்.
ஆனால் சிங்கள பத்திரிகைகள் (மற்றும் த ஐலன்ட் மற்றும் டெய்லி நியுஸ்) இச்செய்தியினை முழுமையாக மறுத்து விட்டன.சண்டே டைம்ஸ்,சண்டே லீடர் மற்றும் டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே இச்சம்பவத்தினை அறிக்கையிட்டிருந்தன.
தமிழ் மக்கள் தெரிந்திருந்ததனைப் போன்று சிங்கள மக்கள்; இச்சம்பவத்தினை தெரிந்திருக்க மாட்டார்கள்.அதனை தெரியப்படுத்துவது ஊடகத்தின் கடமையல்லவா?
இச்சம்பவத்தின் போது தமிழ் பத்திகைகளை தவிர்ந்த ஏனைய பத்திரிகைகள் அனைத்தும் இன மத அடிப்படையில் ஊடக ஒழுக்க நெறிகளை மீறி செயற்பட்டுள்ளதனையும் அவற்றை இவை உதாசீனப்படுத்தும் வகையிலான செய்திப்போக்கை கடைப்பிடித்துள்ளதனையே இது எடுத்துக் காட்டுகின்றது.

1 comment:

Anonymous said...

சிறந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கின்றோம்.நன்றி