Thursday, February 22, 2007

நவீன ஊடகங்களின் வருகையினால் கருணாவை கண்டு கொண்டது உலகம்


Picture by S.Thushan
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கருணா குழுவின் பதாதை
-நாரதர்-


கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு முற்பகுதியில் இலங்கையின் உள்நாட்டுப்போர் தீவிரமாக இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ இராணுவத்திற்கு எதிராகவோ (அரசாங்கத்திற்கு) வாய்திறந்து தமது உண்மையான விமர்சனங்களையும் நடுநிலைமையான கருத்துக்களையும் தெரிவிக்கமுடியாமல் தினறின அப்போதைய ஊடகங்கள்.விசேடமாக தமிழ்.


ஆனால் நவீன ஊடகங்களின் வருகையினால் இந்நிலைமை தகர்த்தெறியப்பட்டுள்ளது.உதாரணமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை முன்பு விமர்சிக்கமுடியாததொரு சூழ்நிலையே காணப்பட்டது.அவ்வாறு செயற்பட்டால், ஊடகங்களின் வாய்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு அவை வரலாற்று சான்றுகளாகியுள்ளன.
இருந்த தமிழ் ஊடகங்களும் பெரும்பாலும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டும் வந்துள்ளன.


இணையத்தளங்கள், இணையத்தள வானொளிகள் மற்றும் இணையத்தள தொலைக்காட்சிகளின் வருகைகளினால்; ஒரு பக்க கருத்துக்கள் மாத்திரம் வெளியாகுவதனை தவிர இவற்றில் பலரது கருத்துக்களும் ஒலிக்கத் தொடங்கின.


அவற்றில் ஒரு விளைவாகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் சென்ற கருணாவிற்கு சார்பாக மட்டும் இன்று 14 இணையத்தளங்கள் கருத்துக்களை பிரசுரித்து வருகின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே.
உண்மையில் சைபரின் வருகையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இவை.(நவீன ஊடகங்கள்).(இவை நன்மைக்கும் உபயோகப்படும் தீமைக்கும் உபயோகப்படும்)
www.groundviews.lk

Tuesday, February 20, 2007

எமக்கு வேண்டும் சமாதானம்


Picture by S.Thushan
எமக்கு வேண்டும் சமாதானம்.

கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?











எஸ்.நயனகணேசன் Picture by S.Thushan

கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?


இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் பாரிய நெருக்கடிக்கடிகளுக்கு மத்தியிலும் எந்தவித உத்தரவாதமுமில்லாத நிலையில். வாழந்து வருகின்றனர்.வடக்கு கிழக்கில் இன்று ஒரு படுகொலையாவது நிகழாமல் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றளவிற்கு வன்முறை கலாசாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதனை காணக்கூடியதாயுள்ளது.


தென்பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் இனவாத உணர்வலைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவற்றுக்கு ஆதரவாகவும் அவற்றுக்கு தீனிபோடும் வகையிலும் அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் என அனைவரும் அவ் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளதனையும் காணக்கூடியதாயுள்ளது.

இலங்கையில் இன்று தமிழர் மீது தினிக்கப்படும் வன்முறைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் இன்று முழு உலகமும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அன்மையில் புலிகளுடன் தொட்ர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையின்த்தை சேரந்த மூன்று சிஙகளவர்களின் பின்னனியில் இன்று அனைத்து தமிழர்களும் புலிகள் என்ற சந்தேகப்பார்வையில் பார்க்கும் படலம் ஆரம்பித்துள்ளதுடன் அவர்கள் மீதான கைதுகளும் அதிகரித்துள்ளன.

அதேவேளை தென்னிலங்கையில் யுத்தத்தினை தீவிரப்படுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் பேரினவாதிகள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதனை கொழும்பில் பல புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அவற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அது,

சமாதான புலிகள்

ஊடக புலிகள்

இடதுசாரி புலிகள்

இணங்கண்டு கொள்வோம்

அழிப்போம்

நாட்டை பாதுகாப்போம்

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம்

பயங்கரவாதத்திற்கெதிரான இவ் அமைப்பின் தலைவர் அனுருத்த பிரதீப் ஆவார்.இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவராவார்.

இச்சுவரொட்டியின் கூற்றுக்கு அமைய இதுவொரு பயங்கரமான நிலைமையாகும்.அப்படியாயின் மற்றுமொரு பந்தியையும் இணைத்துக் கொள்ளல் வேண்டும்.அது ஆர்மி புலிகள் என்பதாகும்.இச்சுவரொட்டியில் அழிக்குமாறு கூறப்பட்டுள்ளது.அப்படியாயின் மனிதர்களையல்லவா கொலை செய்ய சொல்கின்றனர்.கொலை செய்யுமாறு சுவரொட்டி ஒட்டும் இவ்வியக்கம் கொலை செய்யாமல் இருக்குமா? கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக பொறுப்பின்றி எதனையும் கூறமுடியாது.கொலை செய்யப்படவேண்டுமென்பது ஒரு கொள்கையா?தமது கொள்கைகளுக்கு முரணாணவர்களை கொலை செய்யப்பட வேண்டுமென சமூகத்தை தூண்டுதல் பாரிய குற்றமாகும்.அதன் மூலம் இனச்சங்காரமே ஏற்படக்கூடும்.அவ்வாறு இடம்பெற்றால் அதற்கு யார் பொறுப்பு?

அதேவேளை இது தொடர்பாக சுற்றாடல் வள அமைச்சர் கடந்த வாரம் ராவய பத்திரிகையில் தெரிவித்திருந்த கருத்தையும் இங்கே பிரசுரிக்கின்றோம்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
இவன்களை மிச்சம் வைக்கவா சொல்கிறீர்கள்?சுற்றாடல் வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க.


நான் பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கத்தின் உறுப்பினர் அல்ல.ஆனால் நீங்கள் கூறுகின்ற அந்த போஸ்டருடன் நான் முழுமையாக இணங்குகின்றேன்.இன்று இலங்கையில் ஊடகவியலாளர்கள் என்பவன்கள் யார்?

தமிழ் இளைஞர்கள் என கூறப்படுபவர்கள் யார்?அப்படி எவனும் இல்லை.இவன்கள் எல்லோரும் வெளிநாட்டு நிதியில் தங்கியிருக்கும் என்ஜிஓகாரர்கள்.

சமாதானம், யுத்தத்திற்கெதிரான எனக்கூறிக்கொண்டு புலிகளை உருவாக்கியது மட்டுமன்றி நாட்டையும் காட்டிக் கொடுத்து தரகர் வேளை பார்ப்பதையே இந்த பேப்பர்காரர்கள் செய்கின்றனர்.இடது சாரிகள் எனக்கூறிக்கொள்ளும் கூட்டமும் இதனைத்தான் செய்கின்றது.நாட்டில் இருக்கும் சட்டங்களில் இவன்களை தடுக்க முடியாவிடில் முடிந்த எந்த முறையிலாவது அதனை செய்யவேண்டும்.ஆம்.


மனிதர்கள் இறக்கின்றார்கள் தான்.அதற்கு என்ன செய்ய முடியும்.இவன்களை மிச்சபடுத்தவா எங்களுக்கு கூறுகின்றீர்கள்.இவன்கள் தேசத்துரோகிகள்.

இந்த நாட்டில் இருக்கின்ற கழுதைத்தனமான சுதந்திரம் காரணமாகத்தான் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது.கூறப்படும் அந்த சட்டங்களில்இத்தேசத்துரோகிகளை தடுக்கமுடியாவிடில் முடிந்த விதத்தில் அதனை எமக்கு செய்யத் தெரியும்.ராவயைப் பற்றியும் எமக்குத் தெரியும்.ராவய என்ன செய்கின்றது என்பது பற்றியும் எமக்குத் தெரியும்.தமிழன்கள் இறக்கும் பொழுது ராவயவிற்கு கவலை என்றும் எமக்குத் தெரியும்.

ஹலோ நான் சொல்வது இதுதான்.போஸ்டர் அடித்து அடக்க முடியாவிடில் முடிந்த முறைகளிலாவது இவன்களை அடக்க வேண்டும்;.அதனால் தான் நான் இந்த போஸ்டருடன் அரசியல் ரீதியில் இணங்குகின்றேன் எனத் தெரிவித்தேன்.

நீங்கள் கூறும் இந்த போஸ்டர் தவறு என கூறி உங்களால் என்ன செய்யமுடியும்?


தர்மத்தை போதிக்க வேண்டிய பிக்குமார்கள் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம சென்றதுமட்டுமன்றி தமிழர்களுக்கு எதிராக சண்டமாருதம் செயதும் வருகின்றனர்..இதனையா அமைதியே உருவான போதி மாதவன் புத்தர் இவர்களுக்கு போதித்தார்.


யுத்தத்தில் வெற்றியடைந்த நாடுகள் உலகில் எங்கும் இல்லை என்ற உண்மை அறிந்தும் கூட தென்னிலங்கை அரசியல் சக்திகளும் அரசாங்கமும் யுத்தத்தில் தீவிர நம்பிக்கையைக் கொண்டு செயற்படுகின்றமை பாரிய அழிவிற்கே வழிவகுக்கும் என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

அழகாய் இருக்கிறாய்.......















அழகாய் இருக்கிறாய்..............

அழகாய்
நான் எழுதுவேன்!
எழுத எனக்கு ரசணையும்
உண்டு!

* * *
ஆனால்
என்னால் கவிதை மட்டும்
உனக்காக
எழுது முடியாது!

* * *

ஏனெனில்

என் கவிதையே
நீதான்!


நான் நேசிக்கும் நாயகன்


தந்தை பெரியார்

Thursday, February 15, 2007

மலருமா சமாதானம்?


Picture by S.Thushan

மலருமா சமாதானம்?


சில

சமாதான வாதிகள்

பயிலை தூக்கிக்கொண்டு

சமஷ்டி முறைமை பேசி அலைகின்றார்கள்

ஆனால்

அடுத்த வீட்டு ஆண்டி அண்ணனோடு மட்டும்

ஒற்றை ஆட்சி கோட்பாடுகளோடு

கோபித்துக் கொள்கின்றார்கள்


* * *

சமாதானம்

ஒவ்வொருவருக்கும் இடையில்

ஏற்பட்டால் தான் - அது

ஆல மர நிழல் இதத்தை

தரும் என்பதை

சமஷ்டி பயில் சுமக்கும்

சகோதரர்கள் உணர ஏன் மறந்தார்கள்?


* * *


நமது

நாட்டில் உப்பளங்களுக்கு

பஞ்சமேயில்லையே!

உப்பு விலையும் ஏறவில்லையே!

மதங்கள் எல்லாம் தீவிரமாய்

மனிதத்தை போதித்தும் கூட

சொரணை கெட்ட மனிதன்

இன்னும் வாழ்கிறானே.


* * *


சமாதானம்

தொலைந்து போனதால்….

பல சாம்ராஜ்ஜியங்கள்

சரிந்து போயிருக்கலாம்

பல சரித்திரங்கள்

உருவாகியிருக்கலாம்


* * *


அவை

காலம் தீர்ப்பு சொல்லி

முடிவு பெற்றவையா?

அப்படியானால்

நமது சமாதானம்

யார் கையில்?



பிட்டியகந்தை கதிர்

Monday, February 12, 2007

சமாதான புலிகள்




PICTURE BY S.THUSHAN

கொழும்பில் ஒட்டப்பட்டுள்ள பதாதைகள்

Thursday, February 8, 2007

எவரும் யோக்கியவாதிகள் அல்ல

எஸ்.நயனகணேசன்
இம்மாதம் 05 ஆம் திகதி கொழும்பைச் சுற்றிய பகுதிகளில் கடத்திச் செல்லப்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்ப்பட்டு வரும் மூன்று ஊடக தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்பாக 'ராவய" பத்திரிகையில் 'பிரஜை ஊடகவியலாளரொருவரின் குறிப்பு" என்ற பத்தியில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய கட்டுரையை தமிழில் தருகின்றோம்.

ஆயுத போராட்டமும் ஊடக சுதந்திரமும்

கடந்த ஐந்தாம் திகதி இரவு எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது முன்னாள் ஊடகவியலாளரான லலித் செனவிரத்ன தமது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவமாகும்.அவரின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் மேற்கொண்டோம்.

மறு தினம் ஆறாம் திகதியும் எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது லலித் செனவிரத்ன உட்பட 'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினர் தாம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து தெற்கில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தியில் ஏற்பட்ட பரபரப்பினாலாகும். அந்த இரவிலேயே நாம் என்ன கூறப்போகின்றோம் என்ற கேள்வி எழுந்துது புகையிரத சங்க சம்மேளனத்தின் இரு மாத வெளியீடான 'அக்குண" பத்திரிகையின் செயற்பாட்டாளரான லலித் செனவிரத்ன,சிசிற பிரியங்கர மற்றும் நிஹால் சேரசிங்ஹ ஆகிய மூவரும் கடந்த 05 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளனர்.கடத்திச் செல்லல் என்பது ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளை கவனத்திற்கொள்ளாது யாரோ ஒருவர் கடத்திச் செல்வதாகும்.

நாம் அவ் மூன்று கடத்தல்களையும் கண்டித்துள்ளோம்.அவர்கள் அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்தின் மூலமாவது கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் கோரியிருந்தோம்.

புலிகளுடனான தொடர்பு

மறு நாள் அம் மூவரும் தாம் ஆயுத போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை பற்றிக் கொள்ளுதலை நம்பும் புதிய காலணித்துவத்திற்கு எதிரான இயக்க பங்காளர்களென தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை விட விடுதலைப்புலிகள் அமைப்புடன்; இணைந்து செயற்படுவதாகவும் தெற்கில் பல ஆயுத வன்முறைகளை மேற்கொண்டுள்ளதனை ஏற் றுக்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது வெளியாகியுள்ள இவ் வெளிச்சம் காரணமாக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டபோது நாம் தெரிவித்த கருத்து குற்றமாகுமா? நாம் அவர்களின் ஆயுத போராட்டத்திற்கு மறைமுகமான பங்காளர்களாகின்றோமா?

லலித் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முதலாவதாக கிடைத்த தகவல் கடந்த 05 ஆம் திகதி இரவு 11.30 மணிக்காகும். அந்நேரத்திற்குள் அவரது மனைவி மேலும் இரு ஊடக நண்பர்களுடன் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்தனர்.அத்துருகிரிய பொலிசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தனர்.

வாசுவின் தகவல்

அதன் பின்னர் காணாமல் போனவர்களை தேடும் குழுவின் சகோதரர் வாசுவுடன் தொடர்பு கொண்டோம்.அவர் உடனடியாக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விட்டு பின்னர் அவர் தெரிவித்ததாவது இரகசிய பொலிஸார் லலித் செனிவிரத்னவை கைது செய்யவில்லையென அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

லலித்தை கூட்டிச் சென்றவர்கள் தாம் இரகசிய பொலிசார் என்;று தெரிவித்தனர் என லலித்தின் மனைவி காந்தி தெரிவித்தார்.ஆனால் சகோதரர் வாசுதேவ கதைத்பொழுது அவருக்கு தமக்கு எதுவும் தெரியதென இரகசிய பொலிஸார் தெரிவித்ததாக தெரிவித்தார்.நாம் இக்கடத்தல் தொடர்பாக நாட்டுக்கும் உலகிற்கும் தெரிவிப்பதற்கு தீர்மானித்ததாவது அவரை தேடிக்கொள்வதற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்னராகும்.நாம் எடுத்த அம்முடிவு அடிப்படை மனித உரிமையினை பாதுகாத்துக்கொள்வதற்கிருக்கும் உரிமையை செயற்படுத்துவதற்காகும்.

மஹிந்த ராஜபக்~வின் இறந்த காலம்

மஹிந்த ராஜபக்~ அவர்களும் 1988 -90 காலப்பகுதிகளில் எம்முடன் இணைந்து அந்தக் காலங்களில் கடத்தல்களுக்கு எதிராக ஆதரவு வழங்கியுள்ளதினால் அவருக்கும் இதனை ஞாபகப்படுத்துதல் சிறந்தது என சிந்தித்தோம்.முயற்சித்தோம்.தெற்கின் பயங்கரவாதத்தை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டே மஹிந்த ராஜபக்~ அவர்கள் அந்தக் காலங்களில் எம்முடன் இணைந்து கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.ஜனாதிபதியாவதற்குரிய பிரபல்யம் கிடைத்தமையும் இவ்வாறான கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டு கட்டியெழுப்பிய 'மௌ பெரமுன" அமைப்பினூடாகும்.

கடத்திச் செல்லப்படுவது ஆயுத குலுக்கல் மூலமோ அரசாங்கத்தினாலோ கடத்திச் செல்லப்படும் நபர்களின் அரசியல் செயற்பாட்டை கவனத்திற் கொள்ளாது அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பிரதாயமொன்றுள்ளது.இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது அவ்வாறான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.கட்டியெழுப்பியுள்ளனர்.

ஆனால் நிலையானதொரு அடிப்படையின் கீழ் சட்டத்தின் ஆட்சிக்கமைய செயற்படுமாறு கடத்திச் செல்லல் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றிற்கு எதிராக செயற்பட்டுள்ளமை இந்நாட்டின் மனித உரிமை இயக்கங்களில் சிற்சில நபர்களினால் மட்டுமே குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட தொழிற்சங்க ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பாக நாம் அதவாது சுதந்திர ஊடக இயக்கம் மேற்கொண்ட மற்றும் தெரிவித்திருந்த நிலைப்பாடுகள் மற்றும் வரலாற்று அனுபவங்களினடிப்படையிலே நாம் மனித உரிமைகளை பாதுகாப்பது.

சரியான சவால்

ஜனநாயக சமூகமொன்றில் ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் சரியான சவால் அமைதியான சூழலில் ஏற்படாது.ஜனநாயகமல்லாத இயக்கங்களுக்கு முகம் கொடுக்கையிலாகும்.ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் மற்றும் கொலை செய்தல் ஆகியவற்றை கண்டிப்பதற்கு ஜனநாயக இயக்கங்களுக்கு உரிமையுள்ளது.துரதி~;டவசமாக அவ்வாறான இயக்கங்கள் இன்று அரிது.சாள்ஸ் அபேசேகர போன்றோர் சிவில் சமூக இயக்கங்களில் இல்லாததினால் இன்று மஹிந்த ராஜபக்~ போன்றோரும் எதிர்க்கட்சியில் இல்லை.

பின்னொரு காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் நிலைகளைக் கொண்ட அரசியல் குழுக்கல் 1983 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் ஆயுத இயக்கங்களுடன் இணைந்து தெற்கில் புரட்சி இயக்கங்களை கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.வடக்கிற்கு சென்று பயிற்களைக் கூட பெற்றுக் கொண்டுள்ளனர்.நிதியைத் திரட்டிக் கொள்வதற்காக கொள்ளைகளிலும் ஈடுபட்டனர்.அவர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வாறான கடத்தல்களின் மூலமே கைது செய்யப்பட்டனர்.அப்பொழுது சார்ள்ஸ் அபேசேகர தலைமைத்துவத்தின் கீழ் போசனையடைந்த மனித உரிமை அமைப்பு அக்கடத்தல்களை கண்டித்தது மட்டுமன்றி அவர்களுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் என்ற பெயரில் பரந்தலவிலான முன்னணியொன்றும் கட்டியெழுப்பியது.

இன்று 'அக்குண" ஊடக செயற்பாட்டாளர்களின் கடத்தலுக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் வெளிக்காட்டிய எதிர்ப்பு தவறானதென்றோ அல்லது அதற்கும் அப்பால் துரோகமென கருதும் நபர்கள் அந்த வரலாற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளல் சிறந்ததாகும்.நாம் அதன் அடிப்படையிலே தங்கியிருக்கின்றோம்.

இராணுவத்தைச் சேர்ந்தோர்

மேலும் ஒரு விடயத்தை கூற வேண்டும்.ஊடகவியலாளர்கள் மத்தியில் எல்டிடிஈ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி ஊடக சுதந்திரத்திற்காக முன்நிற்கும் அனைவரும் பீதியடையும் நிலையிலுள்ளனர். இராணுவத்திற்குள்ளும் அவ்வாறான நபர்கள் இருக்கின்றார்கள் என இராணுவம் தெரிவிக்கின்றதனையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறான குற்றச்சாட்டுக்கள்; முன்வைக்கப்பட்ட சிலர் பின்னர் குற்றவாளிகலள்ள என தீர்மானிக்கப்பட்டதுடன் அதனை ஊடகங்களும் அறிக்கையிட்டன.
ஜனநாயக சமூகமொன்றில் எந்தவொரு பிரஜைக்கும் சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு உரிமை உள்ளது.குற்றமிருந்தால் நீதிமன்றத்திற்கே முடிவு கூற முடியும்.ஏனையோர்களுக்கு குற்றாடடு;க்களை முன்வைக்க மட்டுமே முடியும்.நீதிமன்னறத்தில் குற்றவாளியாக காணப்படும் வரை குற்றவாளியல்லவென நிரூபிப்பதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமையுள்ளது.நாம் முன்நிற்பது அந்த உரிமைக்காகவே.அவ்வாறன்றி பயங்கரத்தையோ அல்லது வன்முiறியில் சமூகத்தை பயமுறுத்துதல் அல்லது அழித்தல் ஆகியவற்றுக்காக அல்ல.எவரொருவரினாலும் பயங்கரவாத வன்முறை கையாளப்பட்டால் நாம் அதனை எதிர்ப்போம்.

Tuesday, February 6, 2007

கடத்திச் செல்லப்பட்ட அக்குண பத்திரிகையின் ஊடகவியலாளர்களை விடுதலை செய்


பத்திரிகை வெளியீடு

06.02.2007

'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினரை கடத்தல்


இலங்கை புகையிரத சங்க சம்மேளனத்தின் 'அக்குண" பத்திரிகையுடன் தொடர்புடைய மற்றும் அதன் செயற்பாட்டாளர்களான பத்திரிகையின் வெளியீட்டாளர் சிசிற பிரியங்கர (38),பக்க வடிவமைப்பாளர் எம்.எல். செனவிரத்ன (35) மற்றும் அதன் செயற்பாட்டாளரொருவரான நிஹால் சேரசிங்ஹ (40) பெப்ரவரி 05 ஆம் திகதி இனந்தெரியாதோரினால் கொழும்பில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

சிசிற பிரியங்கர கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புகையிரத சங்க சம்மேளனமும் நிஹால் சேரசிங்ஹ கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கமுமம் எம்.எல்.செனவிரத்ன கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி மூலமும் சுதந்திர ஊடகம் உறுதி செய்து கொண்டுள்ளது.இது தொடர்பாக முறையே தெமட்டகொட மற்றும் அத்துருகிரியை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரவு 11.30 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளிப்பதற்கு தாம் பனிபுரியும் இடத்திற்கு சென்ற சிசிற பிரியங்க மீண்டும் திரும்பவில்லை.நிஹால் சேரசிங்ஹ கடந்த 05 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு இரு குழந்தைகளின் தந்தையாவார்;.(ஆறு வயது மற்றும் ஒரு வயதில்)
அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு நிஹால் சேரசிங்ஹ தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவர் ஒரு குழந்தையின் தந்தையாவார்.(ஆறு வயது)

மேலும் அமைச்சர்களின் சம்பளம் மட்டும் அதிகரிப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்த்தில் மனுவொன்றை முன்வைத்து பின்னர் நிராகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனு ஆகியவற்றின் முன்னோடியான செயற்பாடுகளை மேற்கொண்டது இலங்கை புகையிரத சங்க சம்ளேனமாகும்.இக்கைது செய்தல் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமான முறையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நபர்கள் தொடர்பாக ஏதாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் அது சட்டத்தின் நிர்வாகத்திற்கேற்பவே மேற்கொள்ளப்பட வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகின்றது.

இந்நபர்கள் அரசாங்கத்தின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களது உயிரை பாதுகாக்குமாறும் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் தேவையான சட்ட உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.இவ் சட்டவிரோத கைது செய்தலை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும் சுதந்திர ஊடக இயக்கம் இவ் சட்டவிரோத கைது செய்தலையும் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் இடமாகும்பொழுது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் பாதுகாப்பு கிடைக்காது போகுமென இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Monday, February 5, 2007

ஊடகங்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறைகள்


எஸ்.நயனகணேசன்

'எனது மகள் மீது பயங்கரவாதியென பழி சுமத்துவது அநியாயம்.எனது மகள் பயங்கரவாதியும் அல்ல புலியும் அல்ல.விசாரணை செய்வதாக சீ ஐ டியினர் தெரிவிக்கின்றனர்.ஆனால் அவற்றில் ஒன்றும் உண்மையில்லை.தேடவேண்டிய தேவை இருந்திருப்பின் தகவல்களை தேடியிருக்கலாம்" என கவலை தோய்ந்த முகத்துடன் எதுவித குற்றச்சாடடடுக்களுமின்றியும் விசாரணைகளுமின்றியும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் செய்தியாளரான பரமேஸ்வரியின் தந்தை முனுசாமி தெரிவிக்கின்றார்.
கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் வைத்து மௌபிம என்ற வார பத்திரிகையின் ஊடகவியலாளரான முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
இவரின் விடுதலைக்காக இலங்கையில் இயங்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் , ஊடக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என அனைவரும் இணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அவரை விடுதலை செய்வதில் அரசாங்கம் மெனமாகவே இருந்து வருகின்றது.
இவரின் விடுதலைக்காக தேசய மட்டத்தில் அண்மைக்காலம் வரை மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு ஆதரவு செதரிவித்து கடந்த 31 ஆம் திகதி சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்களும் பிரச்சாரத்தினை மேற்கொண்டன.இதில் முக்கிய விடயம் யாதெனில் இன்று மரணப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையின் ஊடகவியலை காப்பாற்றுவதற்கு அரச மட்டத்தில் எந்தவிதமான உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லையென்பதாகும்.அவற்றினை அரசாங்கம் மேற்கொள்வதற்கு பதிலாக அவற்றை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.இவற்றுக்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொண்டு செல்லும் பத்திரிகை அச்சுக்கான மூலப் பொருள் தடையை கூறலாம்.அது மட்டுமன்றி மறைமுகமாக யாழில் வாழும் ஆறு லட்சம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தினை நசுக்கும் உரு செயலாகவே இதனை எண்ணத் தோன்றுகிறது.
எந்தவொரு யுத்தத்திலும் முதலில் உயிர் துறப்பது உண்மையே.அது இன்று இலங்கையில் அமோகமாக அரச தரப்பில் விமர்சையாக மேற்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இவை இவ்வாறிருக்கையில் கடந்த வருடம் உலக பத்திரிகை சுதந்திர தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டு போது அதில் பங்கேற்றிய சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்தோபர் வொறன் 'இலங்கையின் ஊடகவியல் மரணப்பொறிக்குள்" எனத் தெரிவித்திருந்த கூற்;று இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் அக்கூற்றுக்கு மேலம் வலுச்சேர்த்துள்ளது.
அதேவேளை ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யக் கோரி சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் (International Fedaration of Journalists) மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement) ஆகிய ஊடக அமைப்புக்கள் உட்பட இலங்கையின் ஏனைய ஊடக அமைப்புக்கள் அவரை விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி விடுத்திருக்கின்ற அறிக்கை மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொண்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
மிகவும் ஆக்கப்பூர்வான அறிக்கை பரமேஸ்வரியை விடுதலை செய்வதற்கு அரசாங்கததிற்கு அழுத்தத்தினை வழங்கும் என நம்புகின்றோம். இல்லாவிடில் தொடர்ந்தும் ஊடகவியலாளர் கொலை செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் நீண்டு செல்வதற்இடமளிப்பதா என்பதனை நாம் பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.