Wednesday, April 30, 2008
Tuesday, April 15, 2008
Tuesday, March 25, 2008
சங்கீத வாணி
உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங் கொண்டன.
----
தனிமை இனிமையானது
இரவு சுகமானது
நிலவு உறவானது
கவிதை நட்பானது.
----
நட்புக்கான ஈரமோ....?
காதலுக்கான வரமோ...?
உன் கண்களில்....
----
அந்த
ஓரப்பார்வைகளின்
அர்த்தம் தெரியவில்லை,
இருந்தாலும் - என்மனது
அலாதிக் கொள்கிறது
ஆராதிக்கவும் செய்கிறது.
----
பல நூறு
கற்பனை பட்டைகளில்
மனது ஒப்பனை போட்டு
நடந்து செல்கிறது.
என் நினைவு பூமியில்
ஓயாமல்,
கவிதைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கின்றன.
----
என்
மனசுக்குள்
மார்கழி கூதல்.
நயாகராவின் சாரல் - உன்
நயனங்களிலோ....?
----
----
மனசுக்கு
விழுதுகள் முளைத்தன.
உன் விழிகள்
எதைத் தான் விதைத்ததோ....?
----
ஒவ்வொரு
அந்தி வானமும்
தந்தி கொடுக்கிறது,
இதயத்திற்கு.
துண்டு மேகங்களோடு
பயணிக்கிறது,
முத்திரை ஒட்டிய – உன்
ஈரவிழிகள்முகவரிகள் தரவில்லை,
எங்கு போய் சேருமோ....?
என் இதயம்.
----
வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு,
நிலவுக்கு கடிதம் எழுத கூட
தோன்றுகிறது.
----
இனந்தெரியாத
இரகசிய உணர்வுகள்
என்னை தாலாட்டிக் கொண்டே
இருக்கின்றன.
----
எல்லா
உணர்வுகளும்
படுக்கையறை இரகசியமாய்
மனதறைக்குள்
இரகசியமாய் இருக்கின்றன.
----
உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங்கொண்டதனால்.
Che
Monday, March 17, 2008
Wednesday, March 12, 2008
உன் பார்வை ஒன்றே போதும்!
சில நாட்களுக்கு முன்னர் கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் சிலவற்றை படித்தேன்.'மனிதன் கண்ணாடியை படைக்காவிட்டிருந்தால் காதலில் பாதி குறைந்திருக்கும் கண்களை மட்டும் கடவுள் படைக்காவிட்டிருந்தால் காதல் எவ்வளவு புனிதமாயிருந்திருக்கும் என்பதே அவை.
எனக்கு காலம் தாழ்த்தி அதிஸ்டம் வாய்ப்பது என்பதனை நான் பெற்று வந்த வரம் என நினைக்கின்றேன்.தாமதமாய் ஒரு தையல் மீது மையல் கொள்ள எனக்கேற்பட்ட விருப்பே அது.
அவள் பற்றி என்னுல் எழுந்த உணர்வுகளை படைக்க மொழி தெரியாமல் எந்தளவு விழி பிதுங்குகின்றேனோ அந்தளவு அவளை முதல் தடைவையாக உற்றுப் பார்த்துப் பேசிய போது அவள் விழிகள் பேசி மொழி தெரியாமல் நான் வெதும்பி நின்றேன்.
அவளை சிருஸ்டிக்க எனக்கு தெரிந்த இலக்கியத்தை நான் இங்கு படைக்க விரும்புகின்றேன்.ஆனால் அவள் மீது எனக்கேற்பட்ட ஈர்ப்புக்கு அர்த்தமும் தெரியவில்லை உறவும் தெரியவில்லை.அவள் பார்வையின் கனிவு அவள் நடையின் நளினம் அவளை நினைக்கும் போதெல்லாம் அவள் என் எதிரில் நின்ற பேரின்ப அதிர்;ச்சிகள் காலையில் எழுந்ததும் முதலில் எதேச்சையாக அவள் முகத்தில் விழத்ததும் பின்னர் நான் விரும்பி விரும்பி அப்பாவையின் பார்வையுடன் எனது நாட்களை ஆரம்பிக்க முயற்சித்ததும் என்னை தினமும் அதிகாலையிலும் அந்தியிலும் இன்னும் நினைவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. காரணம் ஒருவேளை காதலாக இருக்குமோ? எனவும் எண்ணத் தோன்றகின்றது.
இத்தனைக்கும் அவள் நான் இருந்த வாடகை வீட்டில் என்னைப்போல் அவளும் கட்டணம் செலுத்தும் ஓர் அதிதி.மொத்தத்தில் அவள் ஒரு கவிதை.அவள் விழிபார்த்தால் என் வார்த்தைகள் அப்படியே அடங்கின் போகின்றன.
அவளின் சூழ்நிலை பிரிதொரு வாடகை வீடு செல்ல போவதாக அவள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த கூற்று என்னை ஏகாந்தத்திற்கு இட்டுச் சென்றது.அச்சொல்லையும் அவளின் சற்றே தொலைவான இருப்பையும் என் மணம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
சிவனுக்கு உரித்தான ராத்திரியன்று அதிகாலை என்னை அவள் தொலைபேசியில் கூப்பிட்ட போது நான் அடைந்த பரவசத்திற்கு வார்த்தைகள் இல்லை விபரிப்பதற்கு.
அவள் போய்விட்டாள் ஆனால் அவள் நினைவுகளும் நிழலும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.அந்நினைவுகளுக்கு என்னால் பதில் சொல்லவும் புரியவில்லை பதிலும் தெரியாது தெரிந்தாலும் சொல்லமாட்டேன்.ஆனால் அவள் நினைவுகள் மட்டும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கினறன.
Che
Monday, March 3, 2008
Thursday, February 14, 2008
என் அன்பு தமிழுக்கு.......
அழகான
வார்த்தைகளை
அடுக்காக எழுதுவதினால்
கவிதை உருவெடுக்காது !
* * *
கூட கொஞ்சம்
ரசனை தேவை!
* * *
நான் யதார்த்தத்தை நேசிக்கும்
நான் யதார்த்தத்தை நேசிக்கும்
நயம் கொண்ட கொண்ட நயன் !
* * *
என் நயனங்களும் அவற்றையே
நேசிக்கினறன !
என் காதலிக்காக
என்னுல் தோன்றிய ரசனைகளை
தொகுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன் !
* * *
என்றும்
என்றும்
செல்வியாக திகழும்
என் தமிழுக்கு ................!
* * *
என் தூய்மையான
என் தூய்மையான
அன்பை பரிமாறிக்கொள்ள
என்னால் முடிந்த
அழகான வார்த்தைகளை
அழகாக அவளுக்காக தொகுக்கின்றேன் !
* * *
2008 :- காதலர் தினத்தில்.
2008 :- காதலர் தினத்தில்.
என் அன்பு தமிழ்ச்செல்விக்கு அன்புடன் ---- நயன்
------இதயம் கனிந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.-----
Subscribe to:
Posts (Atom)