Thursday, November 23, 2006

சமாதானத்திற்கு குந்தகத்தை விளைவிக்கும் பேரினவாத ஊடகங்கள்


எஸ்.நயனகணேசன்
படப்பிடிப்பு:- துஷான்

இருபது வருட காலம் ஆயுதங்கள் மூலம் வடக்கு கிழக்கில் யுத்தம் புரிந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தற்பொழுது அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் வகையில் பல வழிகளிலும் இன்று அப்பிரதேசத்திற்கு எதிராக யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதனை காணக்கூடியதாயுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு இந்நாட்டில் வாழ்வதற்கே அருகதையற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் தமிழ் மக்கள் அல்லலுறும் நிலைமையில் அன்மைக்காலம் வரை விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த உத்தியோகபூர்வமற்ற யுத்தம் இன்று அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டு விடுதலைப்புலிகளின் மீது தாக்குதல் நடத்துவதாக புராணம் பாடிக்கொண்டிருக்கின்றது.அது இன்று உத்தியோகபூர்வமாக மாறியிருக்கின்றது.
தெருச்சண்டியர்களின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிட்டாது என்பதனை அன்மைய சம்பவங்களிலிருந்து இவை நன்கு காணக்கூடியதாயுள்ளது.
அந்த வகையிலே ஏ-9 பாதையை மூடிக்கொண்டு யாழ் மக்கள் மீது பட்டினிக் கொடுமையை ஏற்படுத்தி அதற்கு நியாயம் கற்பித்துக்கொண்டிருக்கும் கேவலமான நிலையினை கொண்டிருக்கின்றது தற்போதைய அரசாங்கம்.
அன்மைக்காலம் முதல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சங்காரம் இன்று தலைநகர் கொழும்பிலும் கட்டுக்கடங்காது செல்லும் நிலையில் தமிழ் மக்கள் பெரும் பீதியுடன் வாழ்கின்றதோர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை பட்டியலிட்டுக் கொண்டு செல்லக்கூடிய வகையில் இன்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
அதேவேளை ஆட்சியாளர்களைப் போன்று சிங்கள சமூகத்தினர் அனைவரும் இன்று யுத்த ஆய்வாளர்களாக காணப்படுகின்றமை அவர்கள் எந்தளவு போர் மனோபாவத்தினை கொண்டுள்ளனர் என்பதனையே இது நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்த வகையில் அச்சமூகத்தினர் அவற்றின் உணர்வுகளை மேலும் தூண்டக்கூடிய வகையில் சிங்கள ஊடகங்களும் உண்மையான சம்பவங்களை திரிபுபடுத்தியும் உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகளை பிரிசுரித்து இனப்பிரச்சினையை மேலும் வலுவடையச் செய்வதற்கு வலிகோலுகின்றது. அந்த வகையில். கடந்த 02 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சுத்தாக்குதலை சிங்கள ஊடகங்கள் அனைத்தும் அச்சம்பவத்தினை அரசாங்கத்தின் கூற்றை நியாயப்படுத்தும் வகையிலே தமது செய்திகளை பிரசுரித்திருந்ததனைக் காணக்கூடியதாயிருந்தது. அந்த வகையில்,

லங்காதீப தலைப்புச் செய்தி
கிளிநொச்சி பயிற்சி முகாம் மீது குண்டு தாக்குதல்மன்னார் கடற்படைத்தளம் மீதும் விமானத்தாக்குதல்வைத்திய சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் மீது குண்டுத்தாக்குதலில் ஐவர் பலி.
இச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் முகாம் மீதும் மன்னாரில் அமைந்துள்ள பிரதான கடற்படைத்தளம் மீதும் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. புலிகள் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கும் போதே விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதலின் போது புலிகளின் முகாம் தீப்பற்றி எரிந்ததாகவும் அச்செய்தியில் சாரம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திவயின முன்பக்கச் செய்தி
மன்னார் மற்றும் கிளிநொச்சி இரு முகாம்கள் நாசம்புலிகளின் தலைவர் ஒருவர் உட்பட ஐவர் பலி
லக்பிம தலைப்புச் செய்தி
கிபீர் விமானத்தாக்குதலில் கடற்புலிகளுக்கு பாரிய சேதம்பயிற்சி முகாமிலிருந்த பல உறுப்பினர்கள் உயிரிழப்பு
புலிகளின் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்ஹ தெரிவித்ததாக கூறிய கூற்றை மேற்கொள் காட்டி தமது செய்தியினைக் குறிப்பிட்டிருந்தது.
தினமின பத்திரிகை - இச்செய்திப் பற்றி எவ்வித செய்தினையும் பிரசுரிக்கவில்லை என்பதும் குறிப்பிடவில்லை. அதே போல் தினகரன் பத்திரிகையும் இச்சம்பவம் பற்றி எதுவித செய்தியினையும் பிரசுரித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் ஏனைய தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் இச்சம்பவத்தினை தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
தினக்குரல் -கிளிநொச்சி ஆஸ்பத்திரி சுற்றாடலில் குண்டு வீச்சு இரு மாணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி 500 க்கு அதிகமான நோயாளர் பதறியடித்து வெளியேற்றம்.
வீரசேகரி – கிளிநொச்சியில் விமானக்குண்டு வீச்சு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி.கிளிநொச்சி பொதுவைத்தியசாலையும் சேதம்,நோயாளர்கள் வெளியேற்றம்.
சுடரொளி – கிளிநொச்சி நகரம் மீது முதல் முறையாக விமானக்குண்டு வீச்சு.ஐவர் உயிரிழப்பு மருத்துவமனை அருகே குடியிருப்புக்கள் மீது ';கிபிர்";; தாக்குதல்.
ஆங்கில பத்திரிகைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்கள் என்றே குறிப்பிட்டிருந்தன.
ஆனால் அங்கு இடம்பெற்ற சம்பவத்தினை இலங்கை போர் நிறுத்த கண்கானிப்பு குழுவினரும் விடுதலைப்புலிகளும் தெளிவாக எடுத்துக் காட்டியழருந்தனர்;.அச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்;களாவார்கள்.அங்கே புலிகளின் எந்தவொரு முகாமும் இல்லையென்பதனை அவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்..ஆனால் இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில்; அவர்கள் அனைவரும் விடுதலைப்பலிகள் உறுப்பினராவார்கள்.உண்மை இவ்வாறிருக்கையில், ஆனால் எந்தவொரு பத்திரிகையும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதனை பிரசுரித்திருக்க முன்வரவில்லை என்ப மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதே போக்கினையே செஞ்சோலை மீதான தாக்குதலையும் சித்தரித்திருந்தனர்.அதேபோன்ற நடைமுறையினையே வாகரை அகதி முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான விமானக்கு குண்டுத்தாக்குதலையும் சிங்கள ஊடகங்கள் மாறுபட்ட செய்திப் போக்கினை கொண்டிருந்தன.
இவ்வாறான தொடர்ச்சியாக தகவல்களை வழங்கி வருவதன் மூலம் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை சாதாரணமாகவே கருதுவர்.ஊடகங்களின் பக்கச்சார்பான போக்கு காரணமாகவே இன்று தெற்கு மக்கள் மத்தியில் சமாதான உணர்வை ஏற்படுத்தவது பெரும் சவாலாக உள்ளது.

No comments: