Tuesday, November 28, 2006

முழு மலையகமும் நீரில் முழ்கும் அபாயம்




எஸ்.நயனகணேசன்
படப்பிடிப்பு :- துஷான்
பொல்கொல்லை அனை


உலகில் இன்று அதிகளவில் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகிறது. ஆனால் இவற்றை தடுப்பதற்கு எந்தளவு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதே கேள்விக்குறி.
உதாரணமாக அண்மைக்காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அடைமழை காரணமாக மண்சரிவுகள் இடம்பெற்றதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதனால் ஏற்பட்ட உயிரச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்களும் அதிகமாகும். நிலைமை இவ்வாறிருக்கையில் பல வருடங்கள் மேற்கொள்ளப்பட முடியாதிருந்த மேல்கொத்மலை நீர்த்தேக்க திட்டம் இன்று அனைவரின் எதிர்ப்புக்கும் மத்தியில் மலையக அரசியல் தலைமைகளின் சுயலாப விட்டுக்கொடுப்பினால் அத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
முழு மலையகமுமே இன்று நீர்த்தேக்கங்களில் அமிழ்ந்துள்ள நிலையில் மற்றுமொரு நீர்மின் உற்பத்திக்காக நீர்த்தேக்கத் திட்டம் கண்டி கெட்டம்பேயில்; அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இவ் நீர்த்தேக்கத்திட்டத்தின்; மூலம் சூழலுக்கு பல பாதிப்புக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாக சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 10 மெகாவோட்ஸ் மின்னைப்பெறுவதற்காக கெட்டம்பேயில் இவ்நீர்த்தேக்கத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.சுமார் 25 ஹெக்ரயர் நிலப்பரப்பு நீரினால் முழ்கப்படவுள்ளது. கண்டி கெட்டம்பேக்கு 600 மீற்றர் தொலைவில் மகாவலிகங்கைக்கு குறுக்காக இந்நீர்மின் உற்பத்தித் திட்டம் அமைக்கப்படவுள்ளது. இதானால் பல விளைவுகள் ஏற்படவுள்ளன நன்மைகளிலும் பார்க்க.
இது தொடர்பாக பசுமை இயக்கத்தின் கல்வி மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்த்தின் இணைப்பாளர் பந்துரங்க கருத்துத் தெரிவிக்கையில் 'உண்மையில் இந்நீர்மின் தேக்கத் திட்டத்தினால் அதிக நன்மையிலும் பார்க்க பாதிப்புக்கள் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகின்றது.அதனடிப்படையில் இந்நீர்மின்தேக்கத்திட்டம் அமைக்கப்படுவதினால் இப்பிரதேசத்திலிருந்து ஐந்து குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளன.முதலில் இவர்களுக்கு உரிய நிலங்களும் அதற்குரிய நஷ்ட ஈடுகளும் வழங்கப்படுதல் வேண்டும். இவை பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.நீர்த்தேக்கம் உருவாகும் போது இப்பிரதேசத்திலுள்ள மணற்சுவர்கள் அதிகளவில் உறுதியற்றநிலையிலுள்ளதினால் அவை சரிவுக்குள்ளாகும் நிலை ஏற்படும்.தற்பொழுதும் கூட அன்மையில் ஏற்பட்ட அடைமழை காரணமாக அதிகளவில் மண் சரிவுகள் ஏற்படடுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
இத்திட்டத்தினால் ஆறு நீர்த்தேக்கமாகும் நிலையே காணப்படுகிறது. இவை பற்றிய பூரண தெளிவான விளக்கங்கள் எதுவும் சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. (Environmental Impact Assessment Report– EIA) நாம் உண்மையில் பாதிப்புக்கள் ஏற்படவதற்கு முன்னரே அவற்றை தடுப்பதற்கு முன்வருதல் வேண்டும். பொதுவாக இவை பற்றி நாம் அதிகளவில் குரல் கொடுப்பதினால் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என எம்மீது பழியும் சுமத்தப்படுகின்றது.உண்மையிலே நாம் கோருவது சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத விதத்தில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதாகும்.
இந்நீர்மின் உற்பத்தி திட்டத்தினை ஏசியா ஹைட்ரோ பவர் ஜெனரேஷன் என்ற தனியார் கம்பனி (Asia hydropower genaration PVT company)இதனை நிர்மானிக்கவுள்ளது.இக்கம்பனியினரிடம் கருத்துக் கேட்பதற்கு முற்பட்ட போhது அது தொடர்பாக எதனையும் எம்மால் பத்திரிகைகளுக்கு கூறமுடியாதென தெரிவித்தனர்.மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு எம்மால் கருத்துத் தெரிவிக்கமுடியாதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் நாட்டின் தேவைக்கு மின் உற்பத்தி அவசியம் என்பதில் எந்தவிதமான தர்க்கங்களும் இல்லை.ஆனால் அவை அனைத்தும் குறுகிய நோக்கத்தில் செயற்படுதலே எதிர்காலத்தில் அவை சூழலுக்கு குந்தகமாக அமைந்து விடுகின்றன.
இவ்வாறே (The World Commission on Dams-WCD) ற்கு பேராசிரியர் விதானகே இவ் நீர்த்தேக்கத்திட்டங்களனிhல் ஏற்படப்போகும் பாதிப்பக்கள் பற்றி தெரவித்திருந்தார்.ஆனால் அவை எவற்றுக்கும் அதிகளவு கரிசனைகள் காட்டப்படாததினாலேயே இன்று அவ் அனைக்கட்டுக்கள் உடையும் தருவாயில் காணப்படுகின்றன.
அதனால் இவ் எதிர்வுகூறல்கள் நிருபனமாகிக் கொண்டிருக்கின்றமையினால் அவற்றை கவனத்திற் கொண்டு சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உரிய தரப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

1 comment:

L said...

Hi Nayan I can't read Tamil :(