Thursday, November 23, 2006

கவனிப்பாரற்ற நிலையில் கண்டி ஹந்தானை வாழ் தோட்ட மக்கள்


பி.சசிகலா
படப்பிடிப்பு:- துஷான்

“நாங்கள் எமது தோட்டத்திற்கு கடன் இல்லை.தோட்டம் தான் எமக்கு கடன்.நாம் தோட்டத்திற்கு பல வருடங்கள் சேவை செய்துள்ளோம்.ஆனால் அவர்கள் எமக்கு என்ன செய்தனர்.பதிலுக்கு எம்மை ஏமாற்றினர்.”
“அது மட்டுமல்ல கடன் அறவிடுவதாகக் கூறி எமது சம்பளப்பணத்தில் ஒரு தொகையினை அறவிடுகின்றனர்.ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பாதுகாப்பு நிதியென (ETF,EPF) அறவிடுகின்றனர்.ஆனால் அவை கடந்த ஐந்து வருடமாக வங்கி கணக்கை சென்றடைவதில்லை.”
“அத்துடன் 70 வயதை அடைந்துள்ள பொழுதிலும் இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்னும் தொழில்புரிகின்றனர். நாம் எங்கு சென்று இவ் அக்கிரமத்தை முறையிடுவது என கண்டி ஹந்தானை தோட்டத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 70 வயதினையுடைய தோட்டதொழிலாளியொருவர் தமக்கு இழைக்கப்படும் அநியாயத்தை பெரும் கவலையுடைன் தெரிவிவித்தார்.”
மலையக மக்களுக்கு பெரும் சேவை செய்து விட்டதாக தம்மை மார் தட்டிக்கொள்ளும் மலையக தொழிற்சங்க அரசியல் கட்சிகள் இத்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும்,பாரபட்சங்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்கான காரணத்தை முதலில் நாம் அவர்களிடம் கேட்க விரும்புகின்றோம்.
இத்தோட்டத்தொழிலாளர்களின் கருத்துக்கு ஏற்ப இவ் அநீதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் (JEDB) கீழ் நிர்வகிக்கப்படும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மேற்குப் பிரிவு (West division)இ தொழிற்சாலைப்பிரிவு (கயஉவழசல னiஎளைழைn)இ ஐந்தாம் கட்டை , ஆறாம் கட்டை , ஊராகலை தோட்டம் , கித்துல் முல்லை தோட்டம் மற்றும் பச்சைக்காடு தோட்ட தொழலாளர்களுக்கு எதிராகவே இச்செயற்பாடுகள் தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் அத்தொழிலாளர் தமது பிரச்சினைகளை தெரிவிக்கையில் எமது தோட்ட நிர்வாகம் கடந்த வருடம் எமக்குரிய போனஸ் பணத்தை பெற்றுக்கொடுக்கவில்லை,முற்பணம் வழங்கவில்லை,ஓய்வூதியப் பணம் வழங்கப்படவேண்டியவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்கவில்லை.இவ் அனைத்துக்கும் தோட்ட நிர்வாகமே பதில் கூற வேண்டும்.
இவ் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் எதிராக நாம் கடந்த மாதம் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாகவும் மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தோட்;ட அலுவலகத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 ற்கும் அதிமான தோட்ட தொழிலாளர்கள் ஹந்தானை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளின் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.
ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட ஏழு தோட்டங்களிலும் சுமார் ஐந்நூறிற்கும் அதகமான தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலும் இவ் அனைத்து தோட்டங்களிலும் வாழும் தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் இத்தொழிலாளர்கள் தமது அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாத நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.பெரும்பாலும் லயன் குடியிருப்புக்களில் வாழும் இம்மக்களின் சுகாதாரம் மிகவும் சீர்கெட்ட நிலையிலே உள்ளது.குடிநீர் வசதிகளும் மிகவும் சீர்கெட்ட நிலையிலே உள்ளது.அது மட்டுமன்றி மலசலகூட வசதிகளும் போதிய வசதிகளை கொண்டில்லாமையினால் பெரும் பாலும் தமது இயற்கை கடன்களை இயற்கையுடனே இத்தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
அதேவேளை இத்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையினை எடுத்து நோக்குமிடத்து பெரும்பாலும் ஒரு குடும்பம் ஆறு குடும்ப அங்கத்தவர்களை கொண்டுள்ளது.இந்தளவு எண்ணிக்கையை கொண்ட குடும்பமொன்றின் மாதாந்த வருமாணம் (கணவன் மனைவி இருவரும் மாதமொன்றில் 24 நாட்கள் வேலை செய்திருப்பின்) அவர்கள் இருவரும் பெறும் மாதாந்த வருமாணம் 4480- ரூபாவாகும்.
ஆனால் அக்குடும்பத்தின் மாதம் ஒன்றிற்கான அண்ணளவான செலவு 4930- ரூபாவாகும்.(அரிசி-2750 ரூபா,மரக்கறி-1650 ரூபா,மின் பாவனை 530 ரூபா)
ஏனைய சமூகங்களிடையே ஒப்பிடுமிடத்து இத்தொழலாளர் சமூகம் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அதேவேளை இத்தொழிலாளர்களுடன் இ;வ்விடயம் தொடர்பாக உரையாடுகையில் விரக்தியுடனும் மன உளைச்சலுடனும் உரையாடுவதனை காணக்கூடியதாயிருந்தது.ஆண் பெண் என்ற வேறுபாடின்றி அனைத்து தொழிலாளர்களும் சுமார் நாற்பது வயதை எட்டிய நிலையில் ஏனைய சமூகத்தினரைப் போலல்லாமல் திருப்பதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
அதேவேளை இறுதியாக இத்தொழிலாளர்களுக்கு 2001 ஆம் ஆண்டே ஊழியர் சேமலாப நிதியப்பற்றுச்சீட்டு கையில் கிடைத்துள்ளது.ஆனால் அதற்குரிய தொகை இன்றும் அவர்களது சம்பளப்பட்டியலிலிருந்து அறவிடப்பட்டுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது.
அதேவேளை இத்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தோட்டநிர்வாகம் தெரிவிக்கின்ற அதேவேளை இத்தோட்டங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஹந்தானை வெஸ்ட் டிவி~ன் என்றழைக்கப்படும் தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் வீதம் இலவசமாக காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளது.இது வரவேற்கக்கூடியதொரு விடயமாகும்.இக்காணியில் வீடு கட்டுவதற்காக 50000 ரூபாவினை கடனாக வழங்குவதாக தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.ஆனால் இவ்விரண்டு வருடகாலப்பகுதியில் 20000 ரூபாவினையே வழங்கியுள்ளனர்.
இக்கடன் தொகை தொழிலாளர்களின் சம்பளப்பணத்திலிருந்து அறவிடப்படுகின்றது.மாதாந்தம் 537.50 ரூபா வீதம் அடிப்படையில் பதினைந்து வருடங்களுக்கு அறவிடப்படுகின்றது.பதினைந்து வருட முடிவில் இவ் ஐம்பதாயிரம் தொகைக்கு பதிலாக தொழிலாளியொருவர் செலுத்தி முடிக்கும் தொகை 96750 ரூபாவாகும்.மேலதிகமாக 46750 ரூபாவினை செலுத்துகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இவ்விடயம் தெரியாதுள்ளமையே மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.ஒருகாலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக வர்ணிக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுவா என்ற கேள்வியும் எழுகி;னறது.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிர்வாக முகாமையாளருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது கைகூடவில்லை.அதேவேளை இவ்விடயம் தொடர்பாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சி பி ரத்னாயக்கவிடம் கேட்டபோது அவர் எனக்கு அவ்வாறானதொரு முறைப்பாடு இதுவரை கிடைக்கவில்லை அவ்வாறு கிடைத்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.அது தனியார் கம்பனியாக இருந்தாலும் சரி ஜனவசமாக இருந்தாலும் சரி.அத்துடன் இது தொடர்பாக சரியான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து அது தொடர்பான தீர்வுகளை எடுப்பதற்கு தான் எந்நேரமும் தயாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
எது எவ்வாறிருப்பினும் மலையக மக்கள் இருநூறு வருட காலங்கள் ஏமாற்றப்பட்டு வந்த காலம் போதும்.இனிமேலும் இம்மக்கள் ஏமாற்றப்படக்கூடாது.அதுவே அம்மக்களுக்கு அம்மக்களை பிரதிநித்துவம் செய்யும் அரசியல் தலைமைகளின் மிகப்பாரிய கடமையாகும்.ஹந்தானை தோட்ட மக்களும் அதனையே எதிர்ப்பார்க்கின்றனர்.

No comments: