Wednesday, March 28, 2007

திறந்தவெளி சிறைச்சாலையாகும் திருகோணமலை





-நாரதர்-

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற இலங்கையில் இன்று எந்தளவு அது நிலைத்துள்ளது என்பதனை கேட்குமளவிற்கு அப்பதம் கேள்விக்குறியாகியுள்ளது.அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே திருகோணமலை இன்று திகழ்கிறது.


இனந்தெரியாத ஆயுத குழுக்கல் என்ற பெயரில் படுகொலைகள்,மக்களின் அன்றாட வாழக்கையின் ஓர் அங்கமாக கலந்துள்ள பாதுகாப்பு சோதனைகள்,நித்தமும் நகரில் குவிந்து கிடக்கும் பாதுகாப்பு படையினர்,எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ள பொதுமக்கள் என இவ்வாறு அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.


அந்த வகையில் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இன்று அவற்றுக்கு பதிலாக கருணா குழுவினர் அலுவலகங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.அவர்கள் வழக்கு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கு பொலிஸ் அதிகாரிகளும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றனர்.இதனை நாம் அங்கு சென்று போது நேரில் காணக்கூடியதாயிருந்தது.’நாம் இங்கு பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணைகள் செய்து வருகின்றோம்.அத்துடன் பொது மக்களுக்கு எதிராக இடம்பெறும் வீதிகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் இடைஞ்சலுக்கெதிரான நடவடிக்கைகளையுமே நாம் மேற்கொண்டு வருகின்றோம்.” என அலுவலகத்தின் அதிகாரியொருவர் தமது கருத்துக்களை தெரிவித்தார்.ஆனால் கருணா குழுவினர் நகரில் பிரபல வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



ஒரு ஜனநாயக நாட்டின் இறைமையுள்ள அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படையை வைத்திருக்க முடியுமென்று அரசாங்கத்தின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படைகளை வைத்திருக்க முடியும்.அரசாங்கத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து ஆயுதப்படைகளும் சட்டவிரோதமானதென்றும் கூறப்படுகின்றது.இதுவொரு ஜனநாயக விரோத செயற்பாடு.



அதேவேளை விடுதலைப்புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்த்து வருவதாக அரசாங்கம் புலிகளை குற்றஞ்சாட்டுகின்றது.ஆனால் கருணா குழுவில் சிறுவயதினையுடைவர்கள் ஆயுதமேந்தி அவர்களுடைய அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை இதே அரசாங்கம் இன்னும் கண்டுகொள்ளவில்லை.இவர்களுக்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகையில் ஜனநாயகவிரோத செயற்பாடென அரசாங்கம் கூக்குரலிடுகையில் கருணா குழுவினர் ஆயுதமேந்தியிருக்கும் வேளையில் அதே அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதுடன் அனுமதியும் வழங்கியுள்ளது.அப்படியாயின் இச்செயற்பாட்டின் படி அரசிற்கு ஆதரவானவர்களுக்கு ஒரு ஜனநாயகம் அரசிற்கு எதிரானவர்களுக்கு ஒரு ஜனநாயகமா?









தமது சொந்த நலனிற்காக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதையிட்டு அனைவரும் யோக்கியதர்களாக செயற்படுதலே சிறந்த ஜனநாயகம்.
படங்கள்:-AVG Photo agency

அல்லைப்பிட்டியும் விசாரணையும்


எஸ்.நயனகணேசன்
நான்கு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ் குடாநாட்டின் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான எந்தவொரு வழக்கு விசாரணையும் இதுவரை ஆக்கப்பூர்வமானதாக மேற்கொள்ளப்படாமையானது நீதித்துறையின் மீது பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது மேலும் இழக்கச் செய்கின்றது.


இந்நாட்டின் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சரத் அம்பேபிட்டிய பாதாள உலக கோ~;டியினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது குற்றவாளிகள் ஒரு மாதத்திற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இது இலங்கையின் நீதித்துறையின் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட துரிதமான தீர்ப்பென குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிசாரும் நீதித்துறையும் அரசாங்கமும் மார்தட்டிக் கொண்டது.


நாம் இங்கு கேட்க விரும்பும் முதலாவது கேள்வி அப்பாவி பொது மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குடும்பத்தோடும் படுகொலை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு மட்டும் பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைப்பதில்லை என்பதாகும். அப்படியாயின் இந்நாட்டில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நீதிபதியொருவர் கொலை செய்யப்பட வேண்டுமா? என்பதாகும்.
அன்றிரவு இரவு இடம்பெற்ற இக்கோரச் சம்பவம் பற்றி தமிழ் செய்தி நாளிதழ்கள் (15.03.2007ம் திகதி தினக்குரல்) பிரசுரித்த செய்தியின் ஒரு பகுதியினை இங்கே குறிப்பிடுதல் சம்பவத்தை மீட்டுப்பார்ப்பதற்கு ஆதாரமாகின்றது. 'இரவு 8.30 மணியளவில் அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றினுள் முகத்தை கறுப்புத் துணிகளால் மூடிக்கட்டியவாறு நுழைந்த ஆயுத பாணிகள் அங்கிருந்தவர்களை சுட்டுத்தள்ளியுள்ளனர்.


ஒன்றாக படுக்கையறையினுள் உறங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்;தரையும் அவரது மனைவியையும் அவர்களுக்கிடையில் உறங்கிக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தையும் 4 வயது சிறுவனையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியுள்ளனர்.
தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது தாயும் தந்தையும் தங்களுக்கடையில் உறங்கிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்கள் இருவரையும் தங்கள் மார்புடன் கட்டியணைத்த போதும் ஆயுத பாணிகள் அந்தப்பிள்ளைகளையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளனர்.


இவர்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்து தலைப்பகுதிகளையும் மார்புப்புகுதிகளையும் சல்லடை போட்டுள்ளன.
இந்தச் சம்பவம் அப்பகுதி கடற்படை முகாம், பல காவலரண்கள், கடற்படையினரின் சோதனை நிலையத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்றுள்ளது. எனினும் படையினர் கூட அங்கு வரவில்லை.
இச்சம்பவத்தால் தீவுப்பகுதி அச்சத்தில் உறைந்து போயுள்ளது. அல்லைப்பிட்டியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கோயில்கள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடற்படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் அவர்களே இப்பகுதியில் பல பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தச் சம்பவங்களுடன் தங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் படையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகும். அதன் பின்னர் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் அதேவேளை, படையினர் அவற்றை மறுப்பதும் பின்னர் அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று அமைப்பதுடன் சம்பவம் தூக்கியெறிப்படுதல் ஒரு சம்பவமாகிவிட்டது.


அல்லைப்பிட்டி சம்பவம் பற்றிய வழக்கு இறுதியாக 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியொருவரினூடாக அடையாள அணிவகுப்பும் நடைபெறவிருந்தது. இவ் அடையாள அணிவகுப்பிற்காக கடற்படையினரே உட்பட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணிவகுப்பிற்கான சூழல் யாழில் இல்லையெனக் கூறி அம்பாறையிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு தரப்பினரால் முடிவு செய்யப்பட்டது. வடதுருவத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றினை பிரிதொரு இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுதலென்பது எவ்விதத்திலும் சாத்தியமற்றது. ஆனால் அதற்கான ஏற்பாடுகளோ அல்லது முன்னெடுப்புக்கள் எதுவுமோ இவ்வாரம் மேற்கொள்ளப்படவில்லை.


அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்காத்திற்குமிடையில் ஏற்பட்ட மோதல்களும் ஏ-9 பாதை மூடப்பட்டதும் இச்சம்பவம் பற்றிய பார்வை வேறு வடிவம் பெற்று முக்கியத்துவமற்றதொரு சம்பவமாக உருவெடுத்து விட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹே~; பெரேரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று யாழ் சென்று யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அடங்கலாக இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் அவை எதுவும் ஆரோக்கியமானதாக அமையவில்லை.
இச்சம்பவம் தொடர்பான இறந்த காலம் இவ்வாறு இருக்கையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரை திருப்திகரமானதாக முன்னெடுக்கப்படவில்லை.
அல்லைப்பிட்டி சம்பவம் இடம்பெற்ற அதே திகதியில் மொத்தமாக பதின்மூன்று பேர் அக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் இவ்வாறு வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு செல்கையில் பொது மக்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய அரசாங்கமே அசமந்தப்போக்கில் இருக்கின்றமை தமிழ் மக்களுக்கு எவர் மூலமும் விமோச்சனம் இல்லையென்பதனையே இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.


இக்கட்டுரையினூடாக இச்சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் வரையில் எவருக்கும் இச்சம்பவம் நினைவில் இருக்காது மறந்திருப்பார்கள். ஆனால் துரதி~;டவசமான சம்பவம் யாதெனில் ஒரே இரவில் அப்பாவி பொது மக்கள் பதின்மூன்று பேர் மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது சிங்கள பத்திரிகைகளான திவயின, தினமின, லக்பிம மற்றும் லங்காதீப பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்தியாகவும் சிறு செய்தியாகவும் பிரசுரித்ததிலிருந்து அச்செய்திகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தினை அவை எந்தளவு நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இதைத்தவிர டெய்லி மிரர் பிரதான தலைப்புச் செய்தியாகவும் டெய்லி நியுஸ் பத்திரிகை மற்றும் த ஐலன்ட் ஆகிய ஆங்கில தினசரி பத்திரிகைகள் அனைத்தும் முன்பக்க செய்திகளாகவும் அறிக்கையிட்டிருந்தன.இவற்றுள் (15.05.2006ம் திகதி) தினமின பத்திரிகையில் முன்பக்க சிறு செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியை இங்கு குறிப்பிடுதல் மிகவும் முக்கியமானதாகும்.


'மண்டை தீவு சிவில் மக்கள் படுகொலையினை ஜனாதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்"யாழ் மண்டை தீவில் நேற்று முன்தினம் (13) சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தாம் கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிடுகின்றார். இத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பாக உடன் விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஆணையிடும் ஜனாதிபதி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தராதரமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவே இச் செய்தி.


ஜனாதிபதி அவர்களே இச் சம்பவம் தொடர்பாக உங்களிடமே நாம் கேள்வியைக் கேட்கின்றோம்.இதற்கு யார் பதில் சொல்ல வேண்டும்.


தினக்குரல் 25.03.3007

Sunday, March 18, 2007

யுத்தத்தில் உயிர் துறக்கும் உண்மை



picture by www.lankatruth.com
எஸ்.நயனகணேசன்

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டிய இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவத் தீர்வில் வெற்றிக்கொள்ள முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தின் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்ட வகையில் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.


அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்று வரும் போரை நியாயப்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் அமைச்சர்கள் என அனைவரும் பெரும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றனர்.


அதற்கேற்றாற் போல் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெல்லவின் தாஜா பன்னல்கள் அரசின் கடும்போக்கையும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளையும் உலகிற்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்த வகையில் கடந்த 06 ஆம் திகதி ஐரிஎன் தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான செய்தியில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லை ஊடக துறைக்கு புதிய அத்தியாயமொன்றை இணைத்துள்ளார்.அது இஸ்ரேல் பற்றிய அத்தியாயமாகும்.


'1967 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தத்தின்போது அந்நாட்டின் 13 தொலைக்காட்சி சேவைகளில் ஒரு தொலைக்காட்சியாவது அவ் யுத்தத்தை விமர்சிக்கவில்லை." முழு உலகமும் விமர்சனம் செய்கையில் அவ்வாறானதொரு தேசப்பற்று அவர்களுக்கு இருந்தது.


விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவி வழங்கும் பல அலைவரிசைகள் உள்ளன.; அவற்றுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் நாம தெரிவிப்பதாவது அவற்றுக்கு பொது மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதாகும்.1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு எதிராக கொடூரமான கோர யுத்தமொன்றையே மேற்கொண்டது.அவ் யுத்தத்தில் எகிப்தினதும் சிறியாவினதும் பாரிய நிலப்பிரதேசத்தை இஸ்ரேல் பலவந்தமாக அபகரித்துக் கொண்டது.இதன் பின்னணியிலேயே இன்று அங்கு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது.


1967 ஆம் ஆண்டின் யுத்தத்தினை வரவேற்கும் இந்நிலைப்பாட்டை பலஸ்தீன் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரான மஹிந்த ராஜபக்~ ஏற்றுக்கொள்கின்றாரா? இந்நிலைப்பாட்டை பலஸ்தீன போராளிகள் ஏற்றுக்கொள்வார்களா?
இதன் மூலம் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல பிழை என தெரிந்துகொண்டும் ஊடகவியலாளர்களை பிழைகளுக்கு துணைபோகுமாறு கூறுகின்றார் என்பது அரசாங்கத்தின் தத்துவமென இதன்மூலம் புலப்படுத்துகிறதல்லவா?
அவரின் கூற்றுக்கு நாம் இவ்வாறு பதிலளித்தால்
அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் சரியான தூரப்பார்வையுடைய ஊடகவியலாளர்கள் இருந்திருப்பார்களாயின் என்ன செய்திருக்க வேண்டும்? ஆக்கிரமிப்பின் யதார்த்தினை இஸ்ரேலிய மக்களுக்கு எடுத்துக்கூறுவதா? இல்லாவிடில் அமைச்சர் கேஹலிய குறிப்பிடுவது போல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ஓ போடுவதா? அன்று அவ் அத்துமீறிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொள்iயொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடிந்திருப்பின் பலஸ்ததீன மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு இஸ்ரேல் மக்களை இணங்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அவ்வாறான ஊடகக் கொள்கையொன்றினை கட்டியெழுப்ப முடிந்திருப்பின் அப்படியாயின் இன்று மத்திய கிழக்கில் சிறந்த வரலாறொன்றை காண முடிந்திருக்கும்.
எமக்கு தெரிந்த மற்றும் நாம் கற்றுக்கொண்டுள்ள ஊடகவியலானது உண்மையை பொதுமக்களுக்கு எடுத்தியம்புவதாகும். அதைவிடுத்து குரங்குகளைப் போன்று கட்சிகளை விட்டு விட்டுத் தாவிக்கொண்டிருககும் அமைச்சர்களுக்கு கொடிபிடிப்பதல்ல.


அமெரிக்கா ஆப்கானிஸ்தானிற்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அமெரிக்காவில் இருந்தனர்.இஸ்ரேலுக்குள்ளும் அவ் ஆக்கிரமிப்புக்களை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.அவ் யுத்தத்திற்கு எதிராக சனத்திரளொன்று கட்டியெழுப்பப்பட்டதே இவ் ஊடகங்களின் விமர்சனங்களினடிப்படையிலேயாகும்.


ரம்புக்வெல்ல சிந்தனைக்கேற்ப யுத்தம் சரியாக மேற்கொள்ளப்படுகின்றதென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதாகும்.அவ்வாறு செய்யாதோர் தேசத்துரோகிகளாவார்கள்.விமர்சன ரீதியிலான ஊடகங்கள் யுத்தத்தை முழுமையாக ஆதரிப்பதில்லை.அதனால் அவை தேசத்துரோகிகளாகின்றன.அவ்வாறாகாமலிருப்பதாயின் அவர்கள் இஸ்ரேலின் உதாரணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது முழு உலகமே பிழையென தெரிவித்த கருத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென தெரிவிப்பதாகும்.


1981 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தனவும் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவும் யுத்தத்தை சரியான வழியில் செய்வதாகவே தெரிவித்தனர்.அப்பொழுது அநுருத்த ரத்வத்தை யுத்தத்தினை விற்றுத் தின்பதாக ஜே.ஆரிற்கு எதிராக nரிவித்தார்.அன்று ஜக்கிய தேசியக் கட்சியில் அமர்ந்திருந்த கேஹலிய ரம்புக்வெல்லவின் கட்சி கூட சந்திரிக்கா யுத்தத்தை விற்றுத் தின்பதாக தெரிவித்தது.இன்று மஹிந்த ராஜபக்~வின் அரசாங்கத்தில் தாவிக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காவிடில் மஹிந்த ராஜபக்~விற்கும் இவரின் அரிச்சந்திர வாயால் யுத்தத்தை விற்றுப்பிழைப்பதாக தெரவித்திருக்கக் கூடும்.


கிழக்கு மாகாணம் மீதான யுத்தம் போலியானதென தெரிவித்தது பத்திரிகையாளர்கள் அல்ல.இன்னும் அரசின்; சகாவான ஜேவிபியாகும்.கிழக்கு மீதான யுத்தம் உடனடியாக யுத்தத்தில் வெற்றி பெறுதல் என்பதே ஜேவிபி தலைவர் லால்காந்த பகிரங்மாக தெரிவித்திருந்தார்.அவ்வாறு விமல் வீரவன்சவும் தெரிவித்தார்.


ரம்புக்வெல்ல சிந்தனைக்கு ஏற்ப லால் காந்தவும் தேசத்துரோகி விமல் வீரவன்சவும் தேசத்துரோகி.


அமைச்சரின் கூற்றுக்கேற்ப பார்த்தால் இரணடாம் உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லர் கூட ஊடகங்கள் அனைத்தும் தமக்கு சார்பாகவே செயற்படவேண்டுமென கட்டளையிட்டிருந்தார்.அப்படியாயின் இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பாலஸ்தீன மக்களின் கருத்துக்களை ஊடகங்கள் தெரிவிக்கக்கூடாதா?
அதே போல் இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தத்திற்கு எதிராக இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்கக்கூடாது என்பதனையே அமைச்சரின் கூற்று வெளிப்படுத்துகின்றது.


இவற்றின் மூலம் புலப்படுவது யாதெனில் யுத்தமொன்றின் போது முதலில் உயிர்துறப்பது உண்மை என்பதாகும்.


கவிஞர் அப்துல் ரகுமானின் மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல என்ற தனது கவிதை புத்தகத்தில் கூறிய கவிதையின் ஒரு பகுதியை குறிப்பிடுதல் மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

அது


அதிகாரம் விசித்திரமான சாராயம்.

அதைக் குடிக்கிறவன்தன்னை மறப்பதில்லை:

பிறரை மறந்து விடுகிறான்.


இது அமைச்சருக்கு எந்தளவுக்கு பொறுந்துகிறது.


தினக்குரல் 18.03.2007

Friday, March 16, 2007

Monday, March 12, 2007

' ரணவக்க சிந்தனை '

சுனந்த தேசப்பிரிய

சூழலியல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையிலாவது எம்மை கொலை செய்ய வேண்டுமென தற்பொழுது பகிரங்கமாக கூற ஆரம்பித்து விட்டார்.சம்பிக்க ரணவக்க அவர்கள் ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகரென கேதீஸ்லோகநாதனின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்ட அவரது கட்சியின் முக்கியஸ்ததர் ஒருவரே எமக்கு தெரிவித்தார்.அவ்வாறானதொரு நிலையிலுள்ள ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது அதற்கு உரிய கவனத்தை செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.அதனாலேயே இக்குறிப்பு எழுதப்படுகிறது.

இவ்வாறு கடந்த வாரம் ராவய பத்திரிகையில் 'தடைகளுக்கு மத்தியில் பிரஜை ஊடகவியலாளரொருவரின் குறிப்புக்கள்" எனும் பத்தியை தொடர்ச்சியாக எழுதி வரும் சுதந்திர ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ' சூழலியல் (பயங்கரவாத) அரசியல் ' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தினை தினக்குரல் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கின்றோம்.
கடந்தவொரு தினத்தில் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவரது கட்சியின் முக்கிய நபரொருவர் அழிக்கப்படவேண்டியவர்களின் பெயர் பட்டியலொன்றை வெளிப்படுத்தினார்.

இது புதிய அச்சுறுத்தலல்ல.சம்பிக்க ரணவக்க அவர்களின் 'புலிகளை ஊடறுத்துச் செல்லல் ' (கொட்டி விநி விதீம) என்ற அவர் எழுதிய நூலை வாசித்துப் பார்க்கும் பொழுது புலனடைவது அவருடன் தற்பொழுது அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் பல அமைச்சர்களை பல்வேறு விதங்களில் புலிகளென குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ்,தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்,மலையக மக்கள் முன்னணி,சமசமாஜக் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சி,ஈபிடிபி,புளொட் அமைப்பு என அனைத்து கட்சிகளும் சூழல் அமைச்சருக்கு ஏற்ப புலிகளுடன் தொடைபுடையவர்கள் என்பதனால் அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.அவற்றுல் புளொட்டை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தற்பொழுது அமைச்சு சபையிலே இருக்கின்றன.
அதே போல் ஊடகப் புலிகள் இடதுசாரி புலிகள் மற்றும் சமாதான புலிகள் என அமைச்சர் உட்பட அமைச்சர் தலைமை வகிக்கும் இயக்கங்கள் மூலம் குறிப்பிடப்படும் நபர்கள் அழிக்கப்படவேண்டுமென கொழும்பின் மதில்களில் ஒட்டபட்டுள்ள சுவரொட்டியில் மற்றும் அவர் ராவயவிற்கு தெரிவித்த கருத்துக்கள் சம்பிக்க ரணவக்கவின் நூலினை அடிப்படையாக வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் சில பிரிவுகளை ராவயவின் வாசகர்கள் தெரிந்துகொள்ளுவதற்கு எடுத்துக்காட்டுதல் சிறந்ததாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என சுட்டிக்காட்டும் சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை இதுவாகும்.

' முதலவாது மாயை யாதெனில் தமிழ் மக்கள் மற்றும் புலிப் பயங்கரவாதம் என இரு விடயங்கள் இருக்கின்ற போதிலும் அதே போல் புலிப்பயங்கரவாதத்திற்கு தமிழ் மக்களால் வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்த வேண்டுமெனில் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாi~களையும் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதாகும். '

தமிழின் துன்பங்கள் பிரயோசனப்படுவது புலிகளின் படுகொலை செயற்பாடுகளுக்கே. தமிழ் என்ற பெயரில் வழிநடத்தப்படுவது புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழன்களுக்கும் அவர்களைக்; கொண்ட தமிழ் சமூகத்திற்கு மட்டுமே.

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் நியாயப்படுத்துவது இவ்விதத்திலேயாகும்.
ஹிட்லர் உருவாகியதற்கு ஜேர்மனி சமூகம் நஷ்ட ஈட்டை செலுத்தியது போல் பிரபாகரனை உருவாக்கியதற்கு தமிழ் சமூகமும் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டும்.

எந்தவொரு அரசியல்வாதிக்கும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரிமையில்லாத அதேவேளை அதனை தடுப்பது அனைத்து பிரஜைகளினதும் தேசிய கடமையாகும் என்பதாகும்.
தமிழ் மொழி ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைக்கு காரணம் கற்பிப்பது இதனடிப்படையிலாகும்.

கொழும்பு மற்றும் கண்டி தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட இரு தொலைககாட்சி அலைவரிசைகளும்;;; வானொலி சேவைகள் இரண்டும் வேகமாக பரவியுள்ள மூன்று பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் இருப்பதுடன் அவை நேரடியாக புலிகள் அமைப்பின் கொள்கையினை பிரச்சாரப்படுத்துகின்றது.

1987 ஆம் ஆண்டிற்கு பின் கொழும்பிற்கு வந்த தமிழ் மக்களை அவதானிக்கப்பட வேண்டுமென இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக 1987 ஆம் ஆண்டிலிருந்து வருகைதந்த தமிழ் குடியேற்றவாசிகளின் மூலம் சம்பிரதாயபூர்வ மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களை மீளப்பொற்றுக்கொள்ளலாகும்.இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில்..

அமெரிக்கா மற்றும். எல்ரிரிஈ தொடர்பாக

இந்திய ராஜிவ் காந்தி படுகொலை ஆணைக்குழு குறிப்பிடும் விதத்திற்கு ஏற்ப புலிகள் அமைப்பு ஐக்கிய அமெரிக்க உளவுப் பிரிவுடன் தொடர்புடையதாகும்.திருகோணமலை துறைமுகத்தை புலிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உடன்படிக்கையொன்றுக்கும் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கும் மேலதிகமாக பிரித்தானிய உளவுப் பிரிவுடனும் பாகி~;தான் உளவுப்பிவிவுடனும் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(புலி) அமைச்சு சகாக்கள் பற்றி

சந்திரசேகரன் மற்றும் தொண்டமான் தற்பொழுது வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில் மலைநாட்டு மற்றும் செங்கடகலை பிரதேசம் இந்திய தோட்ட தமிழர்களின் தாயக பூமியென தெரிவித்துள்ளனர்.முதலில் சனத்தொகையை அமைத்துக்கொண்ட அவர்கள் பின்னர் நிலத்தையும் வெற்றிகொண்டுள்ளனர்.அடுத்தாக கொள்கையையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொண்டு செல்வர்.இறுதியில் யுத்தம் மற்றும் தனிராச்சியத்தை நோக்கி வருவர்.

முன்னாள் போராட்ட இயக்கமென கூறிக்கொள்ளும புளொட்,ஈபிஆர்எல்எவ்,ஈபிடிபி,டெலோ அமைப்புக்களும் தமிழர் விடுதலை கூட்டணி தொடர்பான யதார்த்தை தற்பொழுதாவது இலங்கை சமூகம் புரிந்துகொள்ளல் வேண்டும்.புலிப் பயங்கரவாதிகள் குறைநிரப்பாகசெயற்படும் இவ் சேற்று நிறத்தைக்கொண்ட புலிகள் அமைப்பை தடுத்தல் அமைதியான இலங்கைக்கு அத்தியவசியமான நிபந்தனையாகும்.
தமிழ் இனவாதிகளின் புலிப்பயங்கரவாதிகளுக்கு உதவியாளர்களாக செயற்படும் தெற்கின் சில சேற்று நிறம் கொண்ட கூட்டங்களும் வாழ்ந்து வருகின்றன.லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றன.

முஸ்லிம் அரசியல் பற்றி..

முஸலிம் குண்டின் சேவ நூலிற்கு அ~;ரப் தீ வைத்துள்ளார்.தற்பொழுது முஸ்லிம் இனவாத கொள்கையொன்றும் அரசியலும் எழும்பியுள்ளதுடன் அவ் நிலையில் அதற்கு பெரும்பாலும் யுத்த முன்னெடுப்புகளும் இணைத்துக் கொள்ளப்படும்.

அதற்கேற்ப அடுத்த நூற்றாண்டின் நிலைமை இதுவாகும்.அப்படியாயின் 1994 ஆம் ஆண்டு 13 லட்சமாக இருந்த முஸலிம்களின் சனத்தொகை நூறு வருடத்தில் 300-400 லட்ச சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாட்டின் சனத்தொகையில் 55 சதவீதத்தினைக் கொண்ட சனத்தொகையாக முஸலிம் சனத்தொகையைக் கொண்டதாக இலங்கை காணப்படும்.
ஆசியாவில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தல்களின் ஆட்சியாளர்களாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர்.இதற்கமைய இலங்கையின் மோதலுக்கு நிதி மற்றும் மனிதர்களை அனுப்புவதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் முன்வந்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்~ அரசாங்கம் செயற்படுவது சம்பிக்க ரணவக்க அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள பரிந்துரைகளுக்கு அமையவே.அரச சார்பற்ற நிறுவனங்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படல் வேண்டுமென்பது சூழல் அமைச்சரின் கருத்தாகும்.தமிழ் சமூகம் தொடர்பாக தமிழ் தொடர்பாகவும் செயற்படுத்தப்படுவதும் இந் நூலில் குறிப்பிடப்படுள்ள பரிந்துரைகளுக்கு அமையவாகும்.

மேலும் இவ் எழுத்தாவணத்திற்கு அமைய சூழல் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கேற்ப பலர் அழிக்கப்படவேண்டியுள்ளனர்.இவர்களில் சிலர் இருப்பது தற்பொழுது இவர் இருக்கும் அமைச்சரவையிலாகும். அப்போராட்டத்தையும் தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு அவகாசம் உள்ளது.

அவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எம்மை வாழ்வதற்கு இடமளித்தால் அப்போராட்டம் முடிவுறும் விதத்ததை பார்ப்பது புதுமையானதாக இருப்பதற்கு இடமுண்டு.

தினக்குரல் 11.03.2007

Thursday, March 8, 2007

International missin report


Picture by Athula Withanage
Ineternational mission report lounch at Srilanka Press Institute (SLPI).Held on 6th of march.

Sunday, March 4, 2007

யுத்தத்தை ஆதரிக்கும் தென்னிலங்கை


Picture by S.Thushan

by.S.Nayanaganeshan


நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.



இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ருபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான ' ஜனபதி ஹமுவ ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ 'புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை" என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள்.



ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும் திகழ்கின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பார்த்து நாட்டின் அதிபரே அவ்வாறு கூறுகையில் நாட்டில் தற்பொழுது வடகிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரகடனப்படுத்தப்படாத போர் எந்தளவு தூரம் முழு அளவிலான போருக்கு தன்னை அது சுதாகரித்துக் கொண்டுள்ளது என்பதனை விளங்கிக்கொள்வதொன்றும் கடினமான விடயமல்ல.



அந்த வகையில் கடந்த வாரம் கொழும்பின் பல புறங்களில் யுத்தத்திற்கு ஆதரவாகவும் சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களை நாட்டிற்கு குந்தகத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப்பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தோம.;அந்த வகையில் அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் வாகரையில் விடுதலைப்புலிகளுடனான சமரில் வெற்றி வாகை சூடிய இராணுவ வீரர்களுடன் பலத்த புன்னகையுடன் அளாவுலாவும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் கொழும்பின் எல்லா இடங்களிலும் தற்பொழுது காணக்கூடியதாயுள்ளது.



அச்சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்ததாவது



' கொலைகார புலிகள் அழிந்து விட்டனர்


புலியின் வால் தடுமாற்றத்தில்


முடிவு சரியானதே,


ஜனாதிபதி அவர்களே தொடர்ந்து செல்வோம் '



- நில் படையணி-



என்பதே அச்சுவரொட்டியின் மூலம் கூறப்பட்டிருந்த தகவல்.
இன்று தெற்கில் ஒரு காட்டுத்தர்பார் போன்ற போக்கே தலைதூக்கியுள்ளது.அந்த வகையில் எவர் சமாதானத்தைப் பற்றி பேசினாலோ அவர் ஒரு புலி,எவர் போரை விமர்சிக்கின்றாரோ அவர் ஒரு தேசத்துரோகி.நியாயமற்ற முறையில் இனவாத அடிப்படையில் இப்படியான குழுக்கலினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கே வழியில்லாமல் பன்னிவிடும் அது.இன்று மௌனம் சாதிக்கும் அனைவரும் வேதனைப்படுவர்.



எவரும் தமது வெற்றியை கொண்டாடுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமையுண்டு.அதேவேளை அவை ஏனைய சமூக இனத்தவர்களை புன்படுத்தாத வகையிலும் அச்சுறுத்தாத வகையிலும் அதனால் வேறு விளைவுகள் ஏற்படாத வகையில் தமது வெற்றியை கழிப்புறல் வேண்டும்.
அண்மைக்காலங்களில் கொழும்பு சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் பின்னணி அவை எதனடிப்படையில் ஒட்டப்பட்டுள்ளதென்றால் அவை சமாதானத்திற்கு ஆப்பு வைப்பதாகவே அவை அமைந்துள்ளன.



நூற்றுக்கனக்கான புல்லட்டுகளை தாங்கிய இராணுவ வீரர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார் ஜனாதிபதி.இதனால் உணர்த்தப்படுவது யாது யுத்தம் என்பதாகும்.அப்படியாயின் இலங்கையில் சமாதானம் உயிர்துறந்து கொண்டிருக்கின்றது என்பதாகும்.
இன்று சமாதானத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டு விட்டதென்றே எண்ணத்தோன்றுகிறது.



ழ நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி மகாநாடு செயலிழந்துள்ளது.ழ போர் நிறுத்த உடன்படிக்கையைப் பற்றி எந்தவித உத்தரவாதமுமில்லை.ழ போர் நிறுத்த கண்கானிப்பக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ழ சர்வதேச சமூகம் அமைதிகாக்கின்றது.ழ நோர்வே சமாதான தூதுவர்கள் இடையிடையே முகம் காட்கின்றனர்.ழ வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.ழ தலைநகரிலும் ஏனைய புறங்களிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் அவர்கள் மீது பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இவ் 'நில் படையணி" என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மேற்கூறப்பட்ட விடயங்களையா உணர்த்துகின்றது? அப்படியாயின் இச் சுவரொட்டி நியாயமானதென அரசாங்கம் கருதுமாயின் சுவரொட்டிக்கு அமைய ஜனாதிபதி அதே வழியில் செல்லுங்கள் தமிழர்கள் அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதை தடுக்கமுடியாது போகும்.