Tuesday, January 23, 2007

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்கு கொழும்பு கோட்டையில் கூடினர் ஊடகவியலாளர்கள்






கொழும்பிலிருந்து துஷான்
படப்பிடிப்பு:உவிந்து
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு


ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களும் அழுத்;தங்களும் மற்றும் தாக்குதல்களும் மீண்டும் அண்மைக்காலம் முதல் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றதனை தெளிவாக காணக்கூடிதாயுள்ளது.இதிலுள்ள மிகவும் துரதி~;டவசமான சம்பவமானது இவ் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் மற்றும் தாக்குதலுக்கும் அல்லது கொலைகளுக்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதை உரிய அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக தவிர்த்துக் கொண்டு செல்வதாகும்.காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பது ஆபத்திற்குள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நியாயப்படுத்தல் மற்றும் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.இடம்பெற்ற சம்பவங்களே கீழே குறிப்பிடப்படுகின்றன.

2006 2007 ஆம் வருடத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகப்பணியாளர்கள் 06 ஆகும்.ஒரு கடத்தல்
ஊடகவியலாளர் சம்பத் லக்மால்
ஊடகவியலாளர் சுகிர்தராஜன்
யாழ்ப்பாணத்தில் ஊடகப் பணியாளர்கள் 06 பேர்

ஊடகவியலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த குறுகிய காலத்திற்குள் இரு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மௌனசாமி பரமேஸ்வரி – மௌபிம (எந்தவொரு குற்றச்சாட்டினையும் முன்வைக்காது 60 நாட்களுக்கு மேலாக கைது செய்து தடுத்து வைத்துக்கொண்டுள்ளதுடன் அவரின் நலன்களையும் துன்பங்களையும் விசாரிப்பதற்கு ஊடக அமைப்புக்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் இடமளிக்கவில்லை)

குமாரவேல் கஜன் - தினக்குரல் (ஒப்பு நோக்காளர்.கடந்த 12 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்)

ஐவர் தாக்குதலுக்கிலக்காகியுள்ளனர்

தெரண தொலைக்காட்சியின் சாரங்க சுயாதீன தொலைக்காட்சின் சுதர்மன்
லங்கா ஈ நிவுஸின் அஜித் ஹரய ஆசிரியர் கொத்திகொட
சண்டே லீடரின் அசோக்க

ஏழு நபர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது

பந்துல பத்மகுமார லசந்த விகரமதுங்க
விக்டர் ஐவர் சுனந்த தேசப்பிரிய
ஸ்ரீ ரங்கா ருவன் பர்டினன்ட்ஸ்
சந்தருவன் சேனாதீர

ரோஹித பா~ன ( உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
அநுருத்த லொக்குஹபுஆராச்சி (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
ராஜ் நிமல் (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)

அதிகளவான ஊடகவியலாளர்களுக்கும் பல ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


• மௌபிம மற்றும் சண்டே லீடர் பத்திரிகைகளுக்கு எதிரான இடையூறுகள்
• லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தல்
• யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை
• லங்கா பத்திரிகை அச்சகத்திற்கு தீவைப்பு
• கிழக்கு மாகாணத்தில் வீரகேசரி,தினக்குரல் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் விநியோகத்திற்கு எதிராக ஆயுதக்குழுக்கல் மூலம் விடுக்கப்பட்டுள்ள தடைகள்.
• சண்டே லீடரின் ரங்க ,யோதசிங்ஹ மற்றும் சிலுமினவின் பிரசன்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பொலிசார் மூலம் புதிய சட்ட திட்டங்களின் கீழ் விசாரணை செய்துள்ளதுடன் செய்தி மூலங்களை வெளியிடுமாறு வற்புறுத்தல்.
• யாழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற தடைகள்
• பொலன்னறுவை ராஜவீரசிங்ஹ பகிரங்க கூட்டமொன்றை ஆவணம் செய்துகொண்டிருக்கும் பொழுது வெளியேற்றியமை.


இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்,ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்,இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்,சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய ஐந்து ஊடக அமைப்புக்களே இவ் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்திருந்தன.

No comments: