Tuesday, January 23, 2007

பெரும்பான்மையின பேரினவாதிகளின் அடக்குமுறைக்குள்ளாகும் மலையக பெருந்தோட்டங்கள்

கிரிமெட்டியிலிருந்து ராஜசேகர்

இலங்கையில் அண்மைக்காலம் முதல் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களால் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே அவற்றுக்கு வெளியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள்; பெரும் இனவாத அடக்கு முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு வெளிப்பாடாக அண்மையில் கொண்ணடாடப்பட்ட பொங்கள் விழா தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையை மேற்கொள்ளும் சிங்கள நபரொருவரை தமிழ் இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.இதன்; பின்னர் இச்சம்பவம் சிங்கள தமிழ் கலவரமாக உருவெடுக்கும் வகையில் சிங்கள காடையர் கும்பலொன்று பொங்கள் தினத்தன்று தமிழ் இளைஞர்களை தாக்குவதற்கு முற்பட்டமை அவர்களின் இனவாத போக்கினை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து சிங்கள காடையர் கும்பலுக்கு இடமளிக்காதிருப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

No comments: