Thursday, February 15, 2007

மலருமா சமாதானம்?


Picture by S.Thushan

மலருமா சமாதானம்?


சில

சமாதான வாதிகள்

பயிலை தூக்கிக்கொண்டு

சமஷ்டி முறைமை பேசி அலைகின்றார்கள்

ஆனால்

அடுத்த வீட்டு ஆண்டி அண்ணனோடு மட்டும்

ஒற்றை ஆட்சி கோட்பாடுகளோடு

கோபித்துக் கொள்கின்றார்கள்


* * *

சமாதானம்

ஒவ்வொருவருக்கும் இடையில்

ஏற்பட்டால் தான் - அது

ஆல மர நிழல் இதத்தை

தரும் என்பதை

சமஷ்டி பயில் சுமக்கும்

சகோதரர்கள் உணர ஏன் மறந்தார்கள்?


* * *


நமது

நாட்டில் உப்பளங்களுக்கு

பஞ்சமேயில்லையே!

உப்பு விலையும் ஏறவில்லையே!

மதங்கள் எல்லாம் தீவிரமாய்

மனிதத்தை போதித்தும் கூட

சொரணை கெட்ட மனிதன்

இன்னும் வாழ்கிறானே.


* * *


சமாதானம்

தொலைந்து போனதால்….

பல சாம்ராஜ்ஜியங்கள்

சரிந்து போயிருக்கலாம்

பல சரித்திரங்கள்

உருவாகியிருக்கலாம்


* * *


அவை

காலம் தீர்ப்பு சொல்லி

முடிவு பெற்றவையா?

அப்படியானால்

நமது சமாதானம்

யார் கையில்?



பிட்டியகந்தை கதிர்

No comments: