Tuesday, March 25, 2008

சங்கீத வாணி



உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங் கொண்டன.


 ----

தனிமை இனிமையானது
இரவு சுகமானது
நிலவு உறவானது
கவிதை நட்பானது.

 ----

நட்புக்கான ஈரமோ....?
காதலுக்கான வரமோ...?
உன் கண்களில்....

 ----

அந்த
ஓரப்பார்வைகளின்
அர்த்தம் தெரியவில்லை,
இருந்தாலும் - என்மனது
அலாதிக் கொள்கிறது
ஆராதிக்கவும் செய்கிறது.


 ----


பல நூறு
கற்பனை பட்டைகளில்
மனது ஒப்பனை போட்டு
நடந்து செல்கிறது.
என் நினைவு பூமியில்
ஓயாமல்,
கவிதைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கின்றன.


 ----

என்
மனசுக்குள்
மார்கழி கூதல்.
நயாகராவின் சாரல் - உன்
நயனங்களிலோ....?

 ----

மனசுக்கு
விழுதுகள் முளைத்தன.
உன் விழிகள்
எதைத் தான் விதைத்ததோ....?


 ----


ஒவ்வொரு
அந்தி வானமும்
தந்தி கொடுக்கிறது,
இதயத்திற்கு.
துண்டு மேகங்களோடு
பயணிக்கிறது,
முத்திரை ஒட்டிய – உன்
ஈரவிழிகள்முகவரிகள் தரவில்லை,
எங்கு போய் சேருமோ....?
என் இதயம்.

 ----

வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு,
நிலவுக்கு கடிதம் எழுத கூட
தோன்றுகிறது.


 ----


இனந்தெரியாத
இரகசிய உணர்வுகள்
என்னை தாலாட்டிக் கொண்டே
இருக்கின்றன.


 ----


எல்லா
உணர்வுகளும்
படுக்கையறை இரகசியமாய்
மனதறைக்குள்
இரகசியமாய் இருக்கின்றன.


 ----


உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங்கொண்டதனால்.


Che

Monday, March 17, 2008

பிடித்தது




' நட்பு நிலவைப் போன்றது.அதில் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் நன்பர்கள்.'



S.நயன்

Wednesday, March 12, 2008

உன் பார்வை ஒன்றே போதும்!



சில நாட்களுக்கு முன்னர் கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் சிலவற்றை படித்தேன்.'மனிதன் கண்ணாடியை படைக்காவிட்டிருந்தால் காதலில் பாதி குறைந்திருக்கும் கண்களை மட்டும் கடவுள் படைக்காவிட்டிருந்தால் காதல் எவ்வளவு புனிதமாயிருந்திருக்கும் என்பதே அவை.


எனக்கு காலம் தாழ்த்தி அதிஸ்டம் வாய்ப்பது என்பதனை நான் பெற்று வந்த வரம் என நினைக்கின்றேன்.தாமதமாய் ஒரு தையல் மீது மையல் கொள்ள எனக்கேற்பட்ட விருப்பே அது.


அவள் பற்றி என்னுல் எழுந்த உணர்வுகளை படைக்க மொழி தெரியாமல் எந்தளவு விழி பிதுங்குகின்றேனோ அந்தளவு அவளை முதல் தடைவையாக உற்றுப் பார்த்துப் பேசிய போது அவள் விழிகள் பேசி மொழி தெரியாமல் நான் வெதும்பி நின்றேன்.


அவளை சிருஸ்டிக்க எனக்கு தெரிந்த இலக்கியத்தை நான் இங்கு படைக்க விரும்புகின்றேன்.ஆனால் அவள் மீது எனக்கேற்பட்ட ஈர்ப்புக்கு அர்த்தமும் தெரியவில்லை உறவும் தெரியவில்லை.அவள் பார்வையின் கனிவு அவள் நடையின் நளினம் அவளை நினைக்கும் போதெல்லாம் அவள் என் எதிரில் நின்ற பேரின்ப அதிர்;ச்சிகள் காலையில் எழுந்ததும் முதலில் எதேச்சையாக அவள் முகத்தில் விழத்ததும் பின்னர் நான் விரும்பி விரும்பி அப்பாவையின் பார்வையுடன் எனது நாட்களை ஆரம்பிக்க முயற்சித்ததும் என்னை தினமும் அதிகாலையிலும் அந்தியிலும் இன்னும் நினைவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. காரணம் ஒருவேளை காதலாக இருக்குமோ? எனவும் எண்ணத் தோன்றகின்றது.


இத்தனைக்கும் அவள் நான் இருந்த வாடகை வீட்டில் என்னைப்போல் அவளும் கட்டணம் செலுத்தும் ஓர் அதிதி.மொத்தத்தில் அவள் ஒரு கவிதை.அவள் விழிபார்த்தால் என் வார்த்தைகள் அப்படியே அடங்கின் போகின்றன.


அவளின் சூழ்நிலை பிரிதொரு வாடகை வீடு செல்ல போவதாக அவள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த கூற்று என்னை ஏகாந்தத்திற்கு இட்டுச் சென்றது.அச்சொல்லையும் அவளின் சற்றே தொலைவான இருப்பையும் என் மணம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.


சிவனுக்கு உரித்தான ராத்திரியன்று அதிகாலை என்னை அவள் தொலைபேசியில் கூப்பிட்ட போது நான் அடைந்த பரவசத்திற்கு வார்த்தைகள் இல்லை விபரிப்பதற்கு.


அவள் போய்விட்டாள் ஆனால் அவள் நினைவுகளும் நிழலும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.அந்நினைவுகளுக்கு என்னால் பதில் சொல்லவும் புரியவில்லை பதிலும் தெரியாது தெரிந்தாலும் சொல்லமாட்டேன்.ஆனால் அவள் நினைவுகள் மட்டும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கினறன.
Che

Monday, March 3, 2008

Thursday, February 14, 2008

என் அன்பு தமிழுக்கு.......




அழகான


வார்த்தைகளை


அடுக்காக எழுதுவதினால்


கவிதை உருவெடுக்காது !



* * *




கூட கொஞ்சம்


ரசனை தேவை!




* * *
நான் யதார்த்தத்தை நேசிக்கும்


நயம் கொண்ட கொண்ட நயன் !



* * *




என் நயனங்களும் அவற்றையே


நேசிக்கினறன !




என் காதலிக்காக


என்னுல் தோன்றிய ரசனைகளை


தொகுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன் !




* * *
என்றும்


செல்வியாக திகழும்


என் தமிழுக்கு ................!




* * *
என் தூய்மையான


அன்பை பரிமாறிக்கொள்ள


என்னால் முடிந்த


அழகான வார்த்தைகளை


அழகாக அவளுக்காக தொகுக்கின்றேன் !




* * *
2008 :- காதலர் தினத்தில்.



என் அன்பு தமிழ்ச்செல்விக்கு அன்புடன் ---- நயன்








------இதயம் கனிந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.-----




Wednesday, December 19, 2007

ஊடகப் போர் (Media War)

ஊடகப் போர் (Media War)

- நாரதர்-

'அய்யோ பாவம் பாருங்கள் இந்தப் பாடசாலை பிள்ளை நுகேகொடையில் புலிகள் வைத்த குண்டு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இவளின் தாய் தந்தையின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும்" என என்னுடன் பணிபுரியும் பெரும்பான்மை யுவதியொருவர்; புலம்பியதை கேட்ட எனக்கும் மிகுந்த வேதனை அளித்தது.ஆனால் (28.11.2007) ஆம் திகதியன்று கிளிநொச்சி ஐயங்கேனியில் வைத்து இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவித் தாக்கும் படையினரின் தாக்குதலில் பலியான ஒன்பது பாடசாலை மாணவர்களினதும் பெற்றோர்களின் மனமும் இவ்வாறு தானே வேதனையுற்றிருக்கும் என நான் அளித்த பதிலிற்கு அவள் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதா என என்னிடம் மீண்டும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டபோது நான் திகைத்துப் போனேன்,மிகவும் ஆச்சர்யமடைந்தேன்.

நான் இங்கு அன்மையில் கிளிநொச்சியிலும் நுகேகொடையிலும் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புச்; சம்பவங்களையும் ஒப்பிட்டு அவ்விரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சிங்கள ஆங்கில நாளிதழ்கள் எந்தளவு முக்கியத்துவத்தினை வழங்கியிருந்தன என்பதனையே அங்கு சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன் ஆகையால் கொலைகளை நியாயாப்படுத்துவதாக இது அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது வாசகர்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதாவது வடகிழக்கில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்படுவதனை தென் சமூகத்தினர் அறிந்துகொள்ளாதிருப்பதன் காரணத்தினாலேயே இன்னும் படுகொலைகள் அதிகரித்த வண்ணமுள்ளது.இதற்கு முக்கிய காரணம் இவ்வாறான சம்பவங்கள் தென்னிலங்கையில் இடம்பெறும் பொழுது அவற்றை மனிதாபிமானக் கண்கொண்டு பார்க்கும் பெரும்பான்மை ஊடகங்கள் வடக்கு கிழக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது அவற்றின் மீதும் காட்டாமையாகும்.அதனாலேயே அவள் அவ்வாறானதொரு வினாவை என்னிடம் தொடுத்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் இப்பத்தியை எழுதும் அதேவேளை முன்பு இப்பத்தியின் மூலம் பெரும்பான்மை ஊடகங்கள் யுத்தத்திற்காதரவாகவும் அவற்றுக்கு தீணிபோடும் வகையிலும் செயற்பட்டு வந்ததனை இதில் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன்.அது இன்று 100 வீதம் நிரூபணமாகியுள்ளது.
அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி ஐயங்கேனி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது மாணவர்கள் பற்றிய செய்தியறிக்கைகளையும் 29 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவியொருவர் தொடர்பாக தென்னிலங்கையில் வெளிவரும் சிங்கள பெரும்பாண்மை ஊடகங்கள் கையாண்ட செய்திப் போக்கை இங்கு தரம்பிரித்து காட்டுவதன் மூலம் ஊடகங்கள கொண்டுள்ள இனவாத போக்கை இதன் மூலம் நன்கு புலப்படுத்திக் காட்டமுடிகின்றது.
அந்த வகையில் ஐயங்கேனி சம்பவத்திற்கு தமிழ் செய்தித்தாள்கள் அனைத்தும் முன்னுரிமை வழங்கி முன் பக்க பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
'டெய்லி மிரர்" ஆங்கில நாளிதழ் இச்சம்பவத்தினை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.வேறெந்தவொரு ஆங்கில பத்திரிகையும் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரிக்க முன்வரவில்லை.சிங்கள பத்திரிகைகளான 'திவியினவும்" 'லங்காதீபவும்" சிறு செய்திகளாக பிரசுரித்திருந்த போதிலும் அதில் லங்காதீப பத்திரிகை இம்மாணவர்களை புலிகளாக சித்திரித்துக் காட்ட தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
அச்செய்தியின் விபரம் வருமாறு
லங்காதீப 28ஃ11ஃ2007
'பலிகளின் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு"
எல்ரீரீஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயங்கேனி பிரதேசத்தில் (27ஃ11ஃ2007) நேற்று காலை இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பின் போது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகளின் மாவீரர் தின இறுதி நாள் வைபவத்தில் கலந்து கொள்வதற்கு சென்று கொண்டிருந்த குழுவினரே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் மாவீரர் தின வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற புலிகள் அமைப்பைச் சேரந்த குழுவொன்றே இக்கிளைமோர் தாக்குதழுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில் தமிழ்நெற் செய்ததித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் வானில் பயனித்துக்கொண்டிருந்த 'பாடசாலை மாணவிகளும் வான் சாரதியும் மற்றொரு சிவிலியனும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது என லங்காதீப பத்திரிகை தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஊடகப் போர் இனப்பிரச்சினை உக்கிரமடைந்து வரும் இலங்கையில் தொடரப்பட்டால் மனிதாபிமானமற்ற சமூகமொன்றையே எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டியேற்படும்.
சமூகங்களுக்கிடையில் நல்லறவுகளையும் சரியான தகவல்களையும் வழங்குவதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டிய ஊடகங்கங்கள் இனவாத அடிப்படையில் செயற்படும் பொழுது நாட்டில் அழிவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Wednesday, August 8, 2007